News April 16, 2025
திண்டுக்கல்லில் ஆறு பவுன் செயின் பறிப்பு !

வேடசந்தூர் அருகே உள்ள ஜி.நடுப்பட்டி ஊராட்சி கேத்தம்பட்டியைச் சேர்ந்தவர் பாப்பாத்தி (55). இவர் நவாமரத்து பட்டியில் இருந்து கேத்தம்பட்டியை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த ஆறு பவுன் நகையை அறுத்துக் கொண்டு பைக்கில் பறந்தனர். இச்சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 17, 2025
திண்டுக்கல்லில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திண்டுக்கல்லில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.18) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, வத்தலகுண்டு, பழைய வத்தலக்குண்டு, சாமியார் மூப்பனூர், ஆடுசாப்பட்டி, கணவாய்பட்டி, ஜி.தும்மலபட்டி, ஊத்தங்கல், புதுப்படி, கன்னிமார் கோயில்பட்டி, கொங்குவார்பட்டி, தோணிமலை, கன்னிவாடி, குய்யவநாயக்கன்பட்டி, தருமத்துப்பட்டி, கோம்பை, மல்லையாபுரம், சுரக்காபட்டி, திப்பம்பட்டி பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News December 17, 2025
பழனி போலீஸ் பெயரில் போலி வேட்டை? SP கடும் எச்சரிக்கை!

பழனி காவல்துறை கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன் விடுத்துள்ள அறிவிப்பில், பழனி அடிவாரத்தில் புதிதாக கடை அமைக்க வியாபாரிகளிடம் காவல்துறை கண்காணிப்பாளர் பெயரைச் சொல்லி பணம் வசூலிப்பதாக தகவல் வருகிறது. புதிய கடை அமைக்க தேவஸ்தானம் நகராட்சியிடம் தான் அனுமதி பெற வேண்டும். இதுபோன்று மோசடி செய்தால் 98847-41609 என்ற காவல்துறை எண்ணுக்கு அழைத்து புகார் அளிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணூங்க!
News December 17, 2025
அறிவித்தார் திண்டுக்கல் கலெக்டர்!

திண்டுக்கல்:-தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நாளை 18/12/2025 வியாழக்கிழமை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. முன்னனி வங்கிகள் கலந்து கொண்டு, மகளிர் தொழில் முனைவோருக்கு உடனுக்குடன் வங்கி கடனுக்கான ஒப்புதல் வழங்கபடும் என்று மாவட்ட கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். அருமையான தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


