News June 26, 2024
திண்டுக்கலில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

திண்டுக்கல் உட்பட 8 மாவட்டங்களில் இன்று(ஜூன் 26) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கவும், போக்குவரத்து பாதிக்கவும் வாய்ப்பு என தகவல்.
Similar News
News December 14, 2025
கொடைக்கானல் பஸ் சக்கரத்தில் சிக்கி பலி!

ஈரோடு மூலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த லோகவிக்னேஷ் (26), நேற்று தனது மோட்டார் சைக்கிளில் கொடைக்கானலுக்குச் சென்றார். வத்தலக்குண்டு அருகே தனியார் பேருந்தை அவர் முந்திச் செல்ல முயன்றபோது, நிலை தடுமாறி கீழே விழுந்து பேருந்தின் முன்பக்க சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 14, 2025
பழனி அருகே நேபாள பெண் விபரீதம் முடிவு!

திண்டுக்கல்: நேபாளம் நாட்டை சேர்ந்த சங்கர் சுணார் (வயது 25). இவர் தனது மனைவி ஜனப் பரியாருடன் (18) பழனி அருகே ஆண்டிப்பட்டியில் தனியார் கோழிப்பண்ணையில் வேலை செய்து வந்தார். ஜனப்பரியார் அடிக்கடி செல்போன் பார்த்ததைசுணார் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜனப் பரியார் நேற்று வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து நெய்காரப்பட்டி போலீசார் விசாரணை!
News December 13, 2025
திண்டுக்கல் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (13.12.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


