News September 14, 2024
திட்டமிட்டபடி அனைத்து தேர்வுகளும் நடத்த வாய்ப்புள்ளது

சென்னயில் பேட்டியளித்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பிரபாகர், “சென்னை எழும்பூர் பிரசிடென்சி பள்ளியில் 300 பேருக்கு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டதில் 242 பேர் வந்துள்ளனர், ஒரு பார்வை குறைபாடு உடைய மாணவர் scribe தேர்வு எழுதி வருகிறார். 61 பணிகள் குரூப் 2 தேர்வில் உள்ளது. திட்டமிட்டபடி அனைத்து தேர்வுகளும் நடத்த வாய்ப்புள்ளதாகவும் இந்தாண்டு இதுவரை 10,315 வேலைவாய்ப்பு உள்ளது” என்றார்.
Similar News
News September 19, 2025
சென்னை மக்களே குடிநீர் வரவில்லையா?

சென்னை மக்களே உங்கள் தெருக்களில் குடிநீர் வரவில்லை அல்லது கழிவுநீர் தேங்கி உள்ளதா? இனி கவலை வேண்டாம். குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றம் சிக்கல்கள் மற்றும் குறைபாடுகளை பகிர 044-4567 4567 என்ற தொலைபேசி எண்ணை chennai metro water அறிமுகம் செய்துள்ளது. இதில் உங்கள் குறைகளை தெரிவிக்கலாம். அல்லது toll-free 1916 எண் மூலம் உடனே தொடர்பு கொள்ளலாம். *இந்த பயனுள்ள தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க*
News September 19, 2025
சென்னையில் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி

சென்னையில் ரேபிஸ் தடுப்பூசி திட்டத்தின் கீழ், இதுவரை 50,823 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது தெருநாய்கள், வளர்ப்பு நாய்கள் என அனைத்து நாய்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. வருங்காலங்களில் தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ரேபிஸ் தடுப்பூசி குறித்து சென்னையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 19, 2025
சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி சென்னை மற்றும் பல்வேறு நகரங்களில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த 2 நாட்களும் மொத்தம் 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும் 21ம் தேதி மகாளய அமாவாசை என்பதால் நாளை செ.20, 21ம் தேதிகளில் ராமேஸ்வரத்துக்கு, மீண்டும் சென்னை திரும்பும் பயணத்துக்கும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என எஸ்இடிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.