News February 10, 2026

திட்டத்தை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

image

செங்கல்பட்டு நகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான உணவு வழங்கும் விரிவாக்கத் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் தி.சினேகா இன்று தொடங்கி வைத்தார். தாம்பரம் மாநகராட்சி, செங்கல்பட்டு மாவட்ட நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தூய்மைப் பணியாளர்களுக்கு தினசரி உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல நகரங்களில் உள்ளாட்சி தலைவர்கள் உணவு பரிமாறி திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

Similar News

News March 11, 2026

செங்கை: ஆதார் அட்டை வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

செங்கல்பட்டு மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டாம். எந்த அலைச்சலும் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே <>இங்கே கிளிக் <<>>செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும், ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க

News March 11, 2026

FLASH: ’திமுகவால் தமிழகம் சீரழிந்துள்ளது!’ – அன்புமணி

image

மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் இன்று 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ”பெண்கள், குழந்தைகள் வாழ தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு சீரழிந்துள்ளது” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், ” போக்சோ குற்றங்கள், பாலியல் வன்கொடுமைகள் முதலமைச்சரின் செவிகளை எட்டவில்லையா?” என பாஜக தலைவர் நயினார் கேள்வி எழுப்பியுள்ளார்.

News March 11, 2026

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை – 2 பேர் கைது!

image

மதுராந்தகம் அருகே மார்ச்.9ம் தேதி இரவு சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வந்த புகாரை அடுத்து அச்சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு குற்றவாளிகளில் ஒரு குற்றவாளி நேற்று (மார்ச். 10) கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மற்றொரு குற்றவாளியான மாரிபுத்தூர் கிராமத்தை சேர்ந்த தாமோதர பெருமாள் (25) என்பவர் இன்று (மார்ச். 11) கைது செய்யப்பட்டுள்ளார்.

error: Content is protected !!