News January 2, 2025
தாவரவியல் பூங்காவிற்கு 23,95000 பேர் வருகை

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை 23 லட்சத்தி 95 ஆயிரத்தி 894 பேர் வந்துள்ளனர். இது 2023 ஆம் ஆண்டு காட்டிலும் நான்கு லட்சம் குறைவானதாகும். நான்கு லட்சம் சுற்றுலாப் பயணிகள் குறைந்துள்ளது சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் வியாபாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News November 25, 2025
நீலகிரி: ஆடு, கோழி பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!
News November 25, 2025
நீலகிரியில் பரபரப்பு: கொந்தளித்த மக்கள்!

நீலகிரி மாவட்டம், கூடலூருக்கு அடுத்த மானவல்லா பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்த நாகியம்மாள் என்ற மூதாட்டியைப் புலி கடித்து கொன்றது. இதையடுத்து, வனவிலங்கு தாக்குதல்கள் குறித்து வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, அப்பகுதி கிராம மக்கள் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இனி இது போன்ற சம்பவம் நிகழாது என வனத்துறையினர் உறுதியளித்ததை தொடர்ந்து, கலைந்து சென்றனர்.
News November 25, 2025
குன்னூர் வட்டார அளவில் சிறந்த பள்ளி தேர்வு

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 2024-25 ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிகளான ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளுக்கு, சிறந்த பள்ளிகளுக்கான கேடயங்களை தலைமையாசிரியர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரூ வழங்கினார். குன்னூர் வட்டார அளவில் புனித கிளமெண்ட்ஸ் பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு பள்ளி தலைமை ஆசிரியை ஷகிலா விருது பெற்றுக் கொண்டார்


