News April 21, 2025

தாளவாடி: கணவனை கொன்ற மனைவி!  

image

தாளவாடி, மல்லன்குழியை சேர்ந்தவர் ரேவதி (35). இவரின் கணவா் தங்கவேலு (44). கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், மல்லன்குழிக்கு நேற்று வந்த தங்கவேலு, தனது இரு மகன்களையும் அழைத்துச் செல்வதாக ரேவதியிடம் கூறியுள்ளாா். இதில் இருவருக்கும் சண்டை வர ரேவதி கல்லை தங்கவேல் தலையில் போட்டு கொன்றுள்ளார். தாளவாடி போலீஸ் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Similar News

News December 16, 2025

ஈரோட்டில் வடமாநில தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்!

image

ஈரோடு வி.வி.சி.ஆர். நகர், செல்வ விநாயகர் கோயில் வீதியை சேர்ந்த சகானி (52), உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர். கடந்த 7 ஆண்டுகளாக ஈரோட்டில் டைல்ஸ் வேலை செய்த அவர், நேற்று அதிகாலை அருகிலுள்ள காலிங்கராயன் வாய்க்காலில் கை, கால் கழுவ முயன்ற போது விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். மேலும் அக்கம் பக்கத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 16, 2025

ஈரோடு: மின் இணைப்பு இருக்கா? முக்கிய தகவல்..

image

பெருந்துறை கருமாண்டி செல்லிபாளையம் அருகே உள்ள மின்கோட்ட அலுவலகத்தில் மாதாந்திர மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் நாளை 17ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு ஈரோடு மேற்பார்வை பொறியாளர் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் பெருந்துறை, வெள்ளோடு, ஈங்கூர், சென்னிமலை, கவுண்டச்சிபாளையம், விஜயமங்கலம், பிடாரியூர் பகுதியை சேர்ந்த மின் பயனீட்டாளர்களின் தங்களது நிறை,குறைகளை தெரிவிக்கலாம்,

News December 16, 2025

கவுந்தப்பாடி அருகே வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது!

image

கவுந்தப்பாடி அடுத்த பழனிசாமி கவுண்டர் வீதி பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரியை, விற்பனை செய்வதாக கவுந்தப்பாடி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதைத்தொடர்ந்து அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், போலியாக வெள்ளைத் தாளில் அச்சிடப்பட்ட எங்களை கொண்டு லாட்டரி என விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது, அதனை தொடர்ந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!