News April 21, 2025

தாளவாடி: கணவனை கொன்ற மனைவி!  

image

தாளவாடி, மல்லன்குழியை சேர்ந்தவர் ரேவதி (35). இவரின் கணவா் தங்கவேலு (44). கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், மல்லன்குழிக்கு நேற்று வந்த தங்கவேலு, தனது இரு மகன்களையும் அழைத்துச் செல்வதாக ரேவதியிடம் கூறியுள்ளாா். இதில் இருவருக்கும் சண்டை வர ரேவதி கல்லை தங்கவேல் தலையில் போட்டு கொன்றுள்ளார். தாளவாடி போலீஸ் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Similar News

News December 21, 2025

ஈரோடு: SSC-ல் 25,487 காலிப்பணியிடங்கள்! APPLY NOW

image

ஈரோடு மக்களே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th Pass
3. கடைசி தேதி : 31.12.2025,
4. சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க<> CLICK HERE<<>>.
வேலை தேடும் ஏழை இளைஞன் யாருக்காவது உதவும் இத்தகவலை அதிகம் SHARE பண்ணுங்க!

News December 21, 2025

பண்ணாரியில் வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது

image

பண்ணாரி கோவிலுக்கு கோபி பகுதியைச் சேர்ந்த அன்னபூரணி (44) இருசக்கர வாகனத்தில் சாமி கும்பிட சென்றுள்ளார். கோயில் முன்பு நிறுத்தி விட்டு சாமி தரிசனம் செய்து விட்டு வந்து பார்த்த போது இருசக்கர வாகனம் காணாததால் சத்தி போலீசில் புகார் அளித்தார். இது குறித்து வாகன சோதனையில் ரமேஷ் குமார் (32) என்ற நபரை பிடித்து அவரிடம் இருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 21, 2025

சிவகிரி அருகே சோகம்: இளம்பெண் உயிரிழப்பு!

image

சிவகிரி அடுத்த தாண்டாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நதியா (26). இவருடைய கணவர் கவுதம். நதியா வீட்டில் ஐடி வேலை பார்த்து வந்தார். நள்ளிரவு 2 மணி வரை வேலை பார்த்த அவர் பின்னர் தூங்கச் சென்றுவிட்டார். காலை 11 மணி அளவில் அவரை எழுப்பிய போது அசைவற்று இருந்தார். உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நதியா உயிரிழ்ந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சிவகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

error: Content is protected !!