News April 21, 2025
தாளவாடி: கணவனை கொன்ற மனைவி!

தாளவாடி, மல்லன்குழியை சேர்ந்தவர் ரேவதி (35). இவரின் கணவா் தங்கவேலு (44). கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், மல்லன்குழிக்கு நேற்று வந்த தங்கவேலு, தனது இரு மகன்களையும் அழைத்துச் செல்வதாக ரேவதியிடம் கூறியுள்ளாா். இதில் இருவருக்கும் சண்டை வர ரேவதி கல்லை தங்கவேல் தலையில் போட்டு கொன்றுள்ளார். தாளவாடி போலீஸ் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Similar News
News December 13, 2025
ஈரோடு: பெண்களுக்கு இலவச தையற்கலை பயிற்சி

சித்தோடு, அரசினர் பொறியியல் கல்லூரி சாலை, வாசவி காலேஜ் அருகில் செயல்படும் கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக பெண்களுக்கான இலவச தையற்கலை பயிற்சி வரும் 20-12-2025 முதல் 31-01-2026 வரை நடைபெற உள்ளது. இதில், பயிற்சி, சீருடை, உணவு, சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும். மேலும் தகவலுக்கு 87783-23213, 72006-50604, 0424-2400338 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.ஷேர் பண்ணுங்க
News December 13, 2025
ஈரோடு:பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது <
News December 13, 2025
பண்ணாரி அம்மன் கோயில் திருவிழா தேதி அறிவிப்பு!

ஈரோடு சத்தியமங்கலம் அடுத்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீபண்ணாரி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. 2026-ம் ஆண்டுக்கான குண்டம் திருவிழா தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2026ஆம் ஆண்டு மார்ச் 16 பங்குனி 2-ம் நாள் திங்கட்கிழமை பூச்சாட்டு விழா ஆரம்பம். முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா மார்ச் 31 செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி அளவில் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மறுபூஜை (6-4-26) அன்று நடைபெறவுள்ளது.


