News April 21, 2025
தாளவாடி: கணவனை கொன்ற மனைவி!

தாளவாடி, மல்லன்குழியை சேர்ந்தவர் ரேவதி (35). இவரின் கணவா் தங்கவேலு (44). கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், மல்லன்குழிக்கு நேற்று வந்த தங்கவேலு, தனது இரு மகன்களையும் அழைத்துச் செல்வதாக ரேவதியிடம் கூறியுள்ளாா். இதில் இருவருக்கும் சண்டை வர ரேவதி கல்லை தங்கவேல் தலையில் போட்டு கொன்றுள்ளார். தாளவாடி போலீஸ் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Similar News
News December 12, 2025
பெருந்துறை அருகே காதல் விவகாரம்: 5 பேர் அதிரடி கைது!

அந்தியூரைச் சேர்ந்த சேதுராஜ், மகாலட்சுமி ஆகியோர் டிசம்பர்-5 அன்று திருமணம் செய்து, பெருந்துறையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கினர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்ததால் பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் 9ஆம் தேதி பெண்ணின் உறவினர்கள் மகாலட்சுமியை கடத்தினர். மேலும் பெருந்துறை போலீசார் அந்த பெண்ணை பாதுகாப்பாக மீட்டனர். இதில் சம்பந்தப்பட்ட 5 பேரையும் கைது செய்தனர்.
News December 12, 2025
பவானி அருகே அழுகிய நிலையில் மிதந்த சடலம்!

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சித்தோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோணவாய்க்கால் பகுதியில், காவிரி ஆற்றில் உடல் அழுகிய நிலையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக பொதுமக்கள் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சித்தோடு போலீசார் உடலை மீட்டு உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 12, 2025
17 பேரை கடித்து குதறிய தெருநாய், பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதி

ஈரோடு பெரிய சேமூர் அடுத்த அம்மன் நகர் சாத்வித் நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன இதன் அருகாமையில் விளையாடிக் கொண்டிருந்த நான்கு சிறுவர்கள் உட்பட அந்த வசிக்கும் 17 பேரை தெரு நாய் ஒன்று கடித்து குதறி உள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த பொதுமக்கள் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்டவர்கள் நாயை விரைந்து பிடிக்க கோரிக்கை வைத்தனர்.


