News May 15, 2024
தார் சாலை மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஊராட்சி ஒன்றியம், பில்ராம்பட்டு முதல் அருணாபுரம் வரை பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின்கீழ், தார் சாலை மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பழனி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா உட்பட பலர் உள்ளனர்.
Similar News
News December 3, 2025
விழுப்புரம்:வீடூர் அணையில் குளிக்க அனுமதி இல்லை!

விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் மயிலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வீடூர் அணையில் தொடர் மழை காரணமாக பொதுமக்கள் யாரும் அணையில் குளிக்கவும் இறங்கவோ அனுமதி இல்லை என நீர்வளத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அணையின் அருகாமையில் அதற்கான எச்சரிக்கை பலகையும் இன்று (டிச.03) நீர்வளத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளது.
News December 3, 2025
திண்டிவனம் நகராட்சியில் ஆட்சியர் ஷேக்.அப்துல் ரஹ்மான் ஆய்வு

திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட வகாஃப் நகரில் உள்ள கருணாவூர் வாய்க்காலினை அகலப்படுத்துவது குறித்து ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (டிச.03) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் திண்டிவனம் சார் ஆட்சியர் திரு.அ.ல.ஆகாஷ், திண்டிவனம் நகராட்சி ஆணையர் திருமதி.பானுமதி, நிண்டிவனம் வருணய் வட்டாட்சியர் திருயுவராஜ் உட்பட பலர் உள்ளனர்.
News December 3, 2025
விழுப்புரம்: மின்சாரம் தாக்கி தச்சு தொழிலாளி பலி

டி.புதுப்பாக்கம் பிரதான சாலையைச் சேர்ந்தவர் தச்சுத் தொழிலாளி தங்கமணி. இவருக்கு மனைவி மற்றும் 5 மாத பெண் குழந்தை உள்ளனர். இவர், நேற்று காலையில் குளித்து முடித்து, கம்பியில் தொங்கிக் கொண்டிருந்த தனது உடையை எடுத்துள்ளார். அப்போது, மின்சார வயரிலிருந்து மின்கசிவு ஏற்பட்டு, இரும்புக் கம்பியில் பரவியிருந்த மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


