News March 21, 2024
தாராபுரம், காங்கேயம் சட்டமன்றதொகுதியின் புதிய திமுக வேட்பாளர்

ஈரோடு தொகுதி கடந்த முறை மதிமுகவுக்கு அளிக்கப்பட்டிருந்தது.தற்போது மதிமுக-விற்கு திருச்சி தொகுதி அளிக்கப்பட்டிருப்பதால், திமுக-வே இத்தொகுதியில் போட்டியிடுகிறது.இந்தத் தொகுதியில் திமுக-வின் சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார்.மாநில இளைஞரணியின் துணைச் செயலாளரார் ஆவார்.இந்தத் தேர்தலில் திமுக இளைஞரணியிலிருந்து போட்டியிடும் ஒரே வேட்பாளரும் இவர்தான். தாராபுரம், காங்கேயம் ஆகியவை இத்தொகுதியில் அடங்கும்.
Similar News
News October 31, 2025
திருப்பூர் அருகே வசமாக சிக்கிய அரசு அதிகாரி!

திருப்பூர், பொங்கலூரைச் சேர்ந்த விவசாயி ராமமூர்த்தியிடம், பட்டா மாறுதலுக்கு ₹40,000 லஞ்சம் கேட்ட காட்டூர் வி.ஏ.ஓ. ஜெயக்குமாரை (51), லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நேற்று கைது செய்தனர். அரசு அதிகாரிகள் உங்களிடமும் லஞ்சம் கேட்டால் தயங்காதீர்கள்..உடனே திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையை (0421-2482816) தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.ஷேர் பண்ணுங்க!
News October 31, 2025
திருப்பூர்: இரவு நேர காவலர்கள் ரோந்து விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, பல்லடம், தாராபுரம், காங்கேயம், அவிநாசி பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். மேலும் அவசர உதவிக்கு 108 அழைக்கலாம்.
News October 30, 2025
திருப்பூரில் இரவு நேர ரோந்து அதிகாரிகள் விவரம்

திருப்பூர் மாநகரில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் , குற்றச் செயல்களை தடுக்கவும் இரவு நேர ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அனுப்பர்பாளையம் சரக உதவி ஆணையர் பிரதீப் குமார் தலைமையில் இன்று இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய காவலர்கள் குறித்த விவரம் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


