News April 26, 2025
தாய் மகளுக்கு பாலியல் தொந்தரவு செய்தவருக்கு இரட்டை ஆயுள்

காரைக்கால்மேடை சேர்ந்த முத்து என்பவர் கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் பரவை பகுதியில் இரவு நேரத்தில் வீடு புகுந்து தாய் மகள் இருவரை தாக்கி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பாக வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துவை கைது செய்தனர். இந்நிலையில் வழக்கை விசாரித்த போக்சோ நீதிமன்ற நீதிபதி கார்த்திகா, முத்துவிற்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.32,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
Similar News
News July 11, 2025
நாகை: குரூப்-4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு…

➡️ தமிழகத்தில் நாளை 13.8 லட்சம் பேர் குரூப்-4 தேர்வு எழுத உள்ளனர்
➡️ தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்
➡️ ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்
➡️ ‘BLACK INK BALL POINT’ பேனாவுக்கு மட்டுமே அனுமதி
➡️ காலை 9 மணிக்கு முன்னதாக தேர்வறைக்குள் செல்வது கட்டாயம்
➡️ வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை
➡️ இதனை தேர்வு எழுத உள்ள நபர்களுக்கு SHARE செய்யவும்!
News July 11, 2025
நாகை கடற்கரையில் நாய்கள் கண்காட்சி அறிவிப்பு – கலெக்டர்

நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் நாய்கள் கண்காட்சி வரும் ஜூலை 13-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் பங்குபெறும் சிறந்த நாய்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.7500, மூன்றாம் பரிசாக ரூ.5000 என வழங்கப்பட உள்ளது. எனவே இந்நிகழ்வில் செல்ல பிராணிகள் வளர்ப்போர் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்குமாறு நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார். SHARE NOW !
News July 10, 2025
மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுக்கும் பணி; ஆட்சியர் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் குறித்து கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடங்கி ஆகஸ்ட் மாத இறுதி வரை நடக்கிறது. இதற்காக நியமிக்கப்பட்டுள்ள முன் கள பணியாளர்கள் தங்கள் பகுதிக்கு வரும் போது அவர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.