News April 26, 2025
தாய் மகளுக்கு பாலியல் தொந்தரவு செய்தவருக்கு இரட்டை ஆயுள்

காரைக்கால்மேடை சேர்ந்த முத்து என்பவர் கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் பரவை பகுதியில் இரவு நேரத்தில் வீடு புகுந்து தாய் மகள் இருவரை தாக்கி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பாக வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துவை கைது செய்தனர். இந்நிலையில் வழக்கை விசாரித்த போக்சோ நீதிமன்ற நீதிபதி கார்த்திகா, முத்துவிற்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.32,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
Similar News
News September 17, 2025
நாகையில் தவெக தலைவர் விஜய் பரப்புரை

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்கிறார். அவ்வகையில் வரும் செப்.20ம் தேதி நாகை மாவட்டம் புத்தூர் ரவுண்டானாவில் தனது பரப்புரை நிகழ்த்த உள்ளார். நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரப்புரை நிகழ்த்த அனுமதி கூறியிருந்த நிலையில், அவருக்கு புத்தூர் ரவுண்டானாவில் பரப்புரை நிகழ்த்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
News September 16, 2025
நாகை மக்களே.. நீங்களும் சொந்த தொழில் தொடங்கலாம்!

நாகையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்க தமிழகத்தில் UYEGP என்ற சூப்பரான திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் சொந்தமாக தொழில் தொடங்க ரூ.5,00,000-ரூ.15,00,000 வரை 25% மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு 8th தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தியடைந்தால் போதும். இங்கு கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இதனை LIKE ஸ்செய்து அனைவருக்கும் SHARE பண்ணுங்க. நீங்களும் தொழிலதிபர் ஆகுங்க!
News September 16, 2025
நாகை: அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மக்களின் முன்னேற்றத்திற்காக தொண்டு செய்து வரும் தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் அம்பேத்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த ஆண்டிற்கான விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பத்தை இணையம் வாயிலாகவோ அல்லது நாகை மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரிலோ பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.