News September 15, 2024
தாம்பரத்திலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கம்

இன்று புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால்,தாம்பரத்திலிருந்து கூடுதலாக பேருந்து சேவைகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. பயணிகள் நலம் கருதி இன்று கூடுதலாக 50 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று காலை 9 மணி முதல் 7 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், ரயில் சேவைகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Similar News
News November 12, 2025
செங்கல்பட்டு: இறந்த தம்பியை பார்த்து சகோதரி உயிரிழப்பு

நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தோர் வின்சென்ட் ஆரோக்கியநாதன், 72, வேளாங்கண்ணி தாமஸ், 77. இருவரும், உடன் பிறந்தவர்கள். திடீரென உடல்நல குறைவால் வின்சென்ட் ஆரோக்கியநாதன் இறந்தார். தம்பி இறந்ததை அறிந்த வேளாங்கண்ணி தாமஸ், கதறி அழுதபடியே அஞ்சலி செலுத்துவதற்காக வந்தார். தம்பியின் உடலை பார்த்து கதறி அழுதபோது, திடீரென மயங்கி விழுந்த வேளாங்கண்ணி தாமஸ், அங்கேயே உயிரிழந்தார்.
News November 12, 2025
செங்கல்பட்டு ரோந்து பணியில் செல்லும் காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் (நவம்பர் 11) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசரத் தேவைகளுக்காக தங்களது உள்ளூர் அதிகாரிகளை தொடர்புகொள்ளலாம் அல்லது 100 என்ற எண்னை தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காவல்துறை தொடர்பு எண்களும் வழங்கப்பட்டுள்ளன. உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News November 11, 2025
செங்கல்பட்டு காவல்துறை அறிவிப்பு

செங்கல்பட்டு காவல்துறை அறிவிப்பை இன்று (நவம்பர் -11) வெளியிட்டுள்ளது, அதில் சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது வாகனங்கள் பழுதாகி நின்றால் சாலையிலே நின்று வாகனத்தின் பழுதை சரி செய்யும் பொழுது பின்னால் வரும் வாகனங்கள் அறியும் வகையில் எச்சரிக்கை பதாகை வைக்க வேண்டும். இல்லையென்றால் தேவை இல்லாமல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் செங்கல்பட்டு காவல்துறை அறிவித்துள்ளது.


