News February 17, 2025
தாது மணல் எடுத்த விவகாரம்; நீதிமன்றம் உத்தரவு

குமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்ட கடலோர பகுதிகளில் தாது மணல் எடுத்த நிறுவனங்களுக்கு எதிராக 2015-ல் தொடரப்பட்ட வழக்கில்சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்புவழங்கி உள்ளது. கொள்ளை வழக்கில் உரிமைத் தொகை ரூ.5,832 கோடியை நிறுவனங்களிடம் வசூலிக்கவும், ரூ.1000 கோடிக்கு மேல் அரசுக்கு வருவாய் இழப்பு என்பதால் அந்நிறுவனங்களின் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்யவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
Similar News
News November 24, 2025
குமரி: மழை பாதிப்பு – உதவி எண்கள் வெளியீடு

அகஸ்தீஸ்வரம் – மாவட்ட வருவாய் அலுவலர் -94450 00482, தோவாளை மாவட்ட வழங்கல் அலுவலர் -94450 00391, கல்குளம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் -9442214997, விளவங்கோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் -9445477848, கிள்ளியூர் – உதவி ஆணையர் ஆயம் – 9445074582. திருவட்டார் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் – 9445000483 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
News November 24, 2025
குமரி: கடன் தொல்லையால் இளைஞர் விபரீத முடிவு!

திண்டுக்கல் தோப்பம் பட்டி பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (21). இவர் மார்த்தாண்டத்தை அடுத்த சென்னி தோட்டம் பகுதியில் உள்ள தனியார் பைனான்சில் கலெக்ஷன் ஏஜென்டாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கடன் தொல்லை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சென்னி தோட்டத்தில் தான் தங்கி இருந்த வீட்டில் நேற்று 23-ம் தேதி விஷ மருந்தி தற்கொலை செய்து கொண்டார். மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 24, 2025
குமரி மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று குமரி, நெல்லை, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, உள்ளிட்ட 24 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.


