News October 23, 2024
தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு

கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் அனுபோக சான்று உள்ளிட்ட சான்றிதழ்களை பெற, இடைத்தரகர்கள் பொதுமக்களிடம் இருந்து ஆயிரக்கணக்கில் பணத்தை பெற்று அதிகாரிகளுக்கு கொடுப்பதாக, நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, இன்று இரவு 7 மணிக்கு லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடியாக அலுவலகத்தில் நுழைந்து, சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் கணக்கில் வராத பணம் கிடைத்ததாக கூறப்படுகிறது.
Similar News
News November 22, 2025
நீலகிரி: பெண் போலீசுக்கு ஆபாச வீடியோ.. ஒருவர் கைது!

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் முருகன் (45). இவர் நீலகிரி எஸ்பி அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், பெண் இன்ஸ்பெக்டர் ஒருவரின் செல்போனை எண்ணை குறித்துக்கொண்டு முருகன், வாட்ஸ்-அப்புக்கு ஆபாச புகைப்படம், வீடியோக்களை அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் இன்ஸ்பெக்டர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஊட்டி ஊரக போலீசார் விசாரணை நடத்தி முருகனை கைது செய்தனர்.
News November 22, 2025
நீலகிரி: இன்று ஒருநாள் தடை அறிவிப்பு!

நீலகிரி, குன்னுார் சிம்ஸ் பார்க் பகுதியில் இருந்து ஜிம்கானா வரையிலான ஆரஞ்ச் குரோவ் சாலை, மாநில நெடுஞ்சாலை துறை சார்பில், 70 லட்சம் ரூபாய் மதிப்பில் 2 நாட்களாக சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. அரசு டவுன் பஸ்கள், ராணுவ வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன. மேலும், 22-ம் தேதி (இன்று) ஒரு நாள் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
News November 22, 2025
ஊட்டி: காட்டு மாட்டை வேட்டையாடியவர் கைது

ஊட்டி அருகே உள்ள கல்லக்கொரை பகுதியில் நேற்று முந்தினம் அதிகாலை வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காட்டு மாட்டை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய ஒருவரை வனத்துறையினர் கைது செய்தனர். கேரள மாநிலம் வழிக்கடவை சேர்ந்த ரேஜி என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பிய 4 பேரை தேடி வருகின்றனர். இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


