News October 23, 2024

தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு

image

கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் அனுபோக சான்று உள்ளிட்ட சான்றிதழ்களை பெற, இடைத்தரகர்கள் பொதுமக்களிடம் இருந்து ஆயிரக்கணக்கில் பணத்தை பெற்று அதிகாரிகளுக்கு கொடுப்பதாக, நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, இன்று இரவு 7 மணிக்கு லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடியாக அலுவலகத்தில் நுழைந்து, சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் கணக்கில் வராத பணம் கிடைத்ததாக கூறப்படுகிறது.

Similar News

News November 26, 2025

நீலகிரி: பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு!

image

நீலகிரி மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க.

News November 26, 2025

நீலகிரி: வாட்ஸ் ஆப் இருக்கா? சூப்பர் தகவல்

image

நீலகிரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 26, 2025

கூடலூரில் காட்டு யானை! பயத்தில் மக்கள்

image

நீலகிரி, கூடலூர் நகருக்குள் வரும் நடுகூடலூர் பகுதியில், குடியிருப்புகளுக்கு மிக அருகில் நேற்று பகல் நேரத்தில் ஒரு காட்டு யானை முகாமிட்டிருப்பது பொதுமக்களில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. பகல் நேரத்திலேயே யானை குடியிருப்பு பகுதிக்கு உலா வந்தது. அப்பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!