News September 13, 2024
தலைமை காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

ராம்ஜிநகர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றுபவர் கார்த்திக். இவர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட போது, திறந்திருந்த பேக்கரியை உரிமையாளரிடம் மூடச் சொல்லி இருக்கிறார். ஆனால் கடையின் உரிமையாளர் வியாபாரம் செய்து கொண்டிருந்ததால், ஆத்திரமடைந்த கார்த்திக் கடை ஊழியரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால், கார்த்திக்கை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து திருச்சி எஸ்பி உத்தரவிட்டுள்ளார். SHAREIT
Similar News
News November 23, 2025
திருச்சி: பால்காரர் கத்தியால் குத்தி கொலை

லால்குடி, நாகராஜ் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பால்காரர் ஆறுமுகம். இவரது இடத்தை அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் என்பர் தனக்கு விற்க சொல்லி கேட்டு பிரச்னை செய்துள்ளார். இந்நிலையில் நேற்று பால் வியாபாரம் முடித்துவிட்டு, வீட்டுக்கு திரும்பிய ஆறுமுகத்தை கோவிந்தன் கத்தியால் குத்தியுள்ளார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
News November 23, 2025
திருச்சி: சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து

திண்டுக்கல் பாறைப்பட்டி குவாரிக்கு ஜல்லி ஏற்றச் சென்ற லாரி புத்தாநத்தம் அடுத்த மெய்யம்பட்டி பிரிவு ரோடு புதுக்குளம் அருகில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயமடைந்த ஓட்டுநர் செல்லப்பன்-ஐ மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 23, 2025
ஸ்ரீரங்கத்தில் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் தொடக்கம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில், ஸ்ரீரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் இன்று (நவ.,22) தொடங்கியது. உற்சவத்தின் முதல் நாளான இன்று மாலை ஸ்ரீரெங்கநாச்சியார், மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தில் பச்சைப்பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி ஊஞ்சல் சேவை கண்டு, பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.


