News September 13, 2024
தலைமை காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

ராம்ஜிநகர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றுபவர் கார்த்திக். இவர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட போது, திறந்திருந்த பேக்கரியை உரிமையாளரிடம் மூடச் சொல்லி இருக்கிறார். ஆனால் கடையின் உரிமையாளர் வியாபாரம் செய்து கொண்டிருந்ததால், ஆத்திரமடைந்த கார்த்திக் கடை ஊழியரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால், கார்த்திக்கை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து திருச்சி எஸ்பி உத்தரவிட்டுள்ளார். SHAREIT
Similar News
News December 18, 2025
திருச்சி: சிறப்பு குறைதீர் முகாம் அறிவிப்பு

திருச்சி மண்டல அளவிலான தபால் சேவை குறைதீர் முகாம், திருச்சி தலைமை தபால் நிலையத்தில் வரும் ஜன.8-ம் தேதி நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்களது குறைகளை பிரதீப்குமார், உதவி இயக்குனர் (காப்பீடு மற்றும் புகார்), அஞ்சல்துறை தலைவர் அலுவலகம், மத்திய மண்டலம், திருச்சி -01 என்ற முகவரிக்கு வரும் 30 ஆம் தேதிக்குள் தபால் மூலம் அனுப்ப வேண்டும் என மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் நிர்மலா தேவி தெரிவித்துள்ளார்.
News December 18, 2025
திருச்சி: வேளாண் கூட்டுறவு சங்கத்தில் வேலை

தென்னிந்திய பல மாநில வேளாண் கூட்டுறவு சங்கம் லிமிடெட் (SIMCO)-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 52
3. வயது: 21 – 41
4. சம்பளம்: ரூ.5,200 – ரூ.28,200
5. கல்வித் தகுதி: 10th, 12th, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி
6. கடைசி தேதி: 20.01.2026
7. மேலும் அறிந்துகொள்ள: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 18, 2025
திருச்சி TaTa COATS நிறுவனத்தில் வேலை ரெடி.!

திருச்சியில் உள்ள TaTa COATS நிறுவனத்தில் AutoCAD 2D, 3D & SolidWorks பணியிடத்திற்கு 5 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஆண், பெண் என இரு பாலரும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படும். ஐடிஐ, டிப்ளமோ முதல் ஏதேனும் ஒர் டிகிரி படித்தவர்கள் ஜனவரி மாதம் 1-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் அறிய 89258-97701 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


