News September 13, 2024
தலைமை காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

ராம்ஜிநகர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றுபவர் கார்த்திக். இவர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட போது, திறந்திருந்த பேக்கரியை உரிமையாளரிடம் மூடச் சொல்லி இருக்கிறார். ஆனால் கடையின் உரிமையாளர் வியாபாரம் செய்து கொண்டிருந்ததால், ஆத்திரமடைந்த கார்த்திக் கடை ஊழியரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால், கார்த்திக்கை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து திருச்சி எஸ்பி உத்தரவிட்டுள்ளார். SHAREIT
Similar News
News October 21, 2025
திருச்சி மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை!

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (அக்.21) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW!
News October 21, 2025
திருச்சி: நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

தீபாவளி பண்டிகை முடிந்து பொதுமக்கள் சென்னை செல்வதற்கு வசதியாக நெல்லையில் இருந்து திருச்சி வழியாக சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாளை (அக்.22) இரவு 11:55 மணிக்கு நெல்லையிலிருந்து சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் மணப்பாறை, திருச்சி ரயில் நிலையங்கள் வழியாக சென்னை சென்றடையும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 21, 2025
JUST IN திருச்சி : 5810 காலியிடங்கள் அறிவிப்பு

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. ஆரம்ப நாள்: 21.10.2025
4. கடைசி தேதி : 20.11.2025
5. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <