News March 18, 2024
தர்மபுரி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

தர்மபுரி தேர்தல் தொடர்பான புகார்களை விசாரணை செய்யவும் தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்கவும் மாவட்டம் முழுவதற்கும் 45பறக்கும் படை குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான புகார்களை elections2024.dpi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் கட்டணமில்லா தொலைபேசி எண்;1800 425 7017 மற்றும் 9363754335 என்ற whatsapp குறுந்தகவல் அளிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 10, 2025
தருமபுரி மாவட்டத்தில் 135 பணியிடங்கள் அறிவிப்பு

தருமபுரி மாவட்ட பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 135 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. பணியிடங்களின் எண்ணிக்கை, அந்தந்த வட்டார அலுவலகங்களில் தகவல் பலகையில் ஒட்டப்படும். 18-40 வயதுடைய 10th பாஸ்/ஃபெயில் ஆன பெண்கள் பிடிஓ அலுவலகம், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் ஏப்.26 மாலைக்குள் விண்ணப்பிக்கலாம். *செம வாய்ப்பு. தெரிந்த 18-40 வயது பெண்களுக்கு பகிரவும்*
News April 10, 2025
ராணுவத்தில் வேலை: இன்றே கடைசி நாள்

அக்னிவீர் திட்டத்தின் கீழ், ராணுவத்தில் பொதுப் பணியாளா், தொழில்நுட்பம், எழுத்தா், கிடங்கு மேலாளா், தொழிலாளி உள்ளிட்ட 25,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தமிழிலும் தேர்வு எழுதலாம். 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இன்றைக்குள் <
News April 10, 2025
சுடுகாட்டில் அடக்கம் செய்ய எதிர்ப்பு

தர்மபுரி மாவட்டம் நீடூரை சேர்ந்தவர் லோகநாதன், 42 நேற்று உயிரிழந்தார். இவரது உடலை அப்பகுதியிலுள்ள இடுகாட்டில் அடக்கம் செய்ய, குழி தோண்டப்பட்டது. இதற்கு சுடுகாட்டிற்கு அருகேயுள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த கடத்துார் போலீசார், வி.ஏ.ஓ., முருகன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால், சுடுகாட்டில் குழி தோண்டப்பட்டு லோகநாதன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.