News August 7, 2024
தர்மபுரியில் நெசவாளர் ஜவுளி விற்பனை துவக்கம்

தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட நெசவாளர் காலனியில் லும்வேர்ட்ஸ் விற்பனை வளாகத்தில் கைத்தறி மற்றும் ஜவுளிகள் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்து பார்வையிட்டார். உடன் சேலம் சரக கைத்தறி துறை உதவி அலுவலர் விஜயலட்சுமி, நகர்மன்ற தலைவர் லட்சுமி, நாட்டான்மாது கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள், நெசவாளர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News February 7, 2026
தர்மபுரியில் இன்று மின் தடை!

சோகத்தூர் துணை மின் நிலையத்தில் இன்று(பிப்.7) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக வெண்ணாம்பட்டி குடியிருப்பு, குமாரசாமிப்பேட்டை, ரெட்டிஅள்ளி, பென்னாகரம் ரோடு, மாந்தோப்பு, இ.ஜெட்டி அள்ளி, அப்பாவு நகர், ரெயில் நிலையம், ஆயுதப்படை குடி யிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
News February 7, 2026
தர்மபுரியில் மூதாட்டிக்கு பாலியல் தொல்லை!

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி கடந்த பிப்.2ஆம் தேதி வாணியாறு அணைப் பகுதியில் உள்ள கோயிலுக்குச் சென்று விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர், மூதாட்டியை பைக்கில் அழைத்துச் சென்று, அருகே உள்ள சுடுகாட்டுப் பகுதியில் வைத்து பாலியல் தொந்தரவு தந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News February 7, 2026
தர்மபுரியில் துடிதுடித்து பலி!

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த வாலிபர் சோகிப்(24). இவருடைய உறவினர் அபீஸ் உல்லா(38). இவர்கல் இருவரும் தேசிய நெடுஞ்சாலையில் முத்துப்பட்டி பிரிவு சாலை அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மோதியதில் இருவரும் கீழே விழுந்தனர். தொடர்ந்து, அதே வழியில் வந்த லாரி சோகிப் மீது ஏறியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


