News August 7, 2024

தர்மபுரியில் நெசவாளர் ஜவுளி விற்பனை துவக்கம்

image

தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட நெசவாளர் காலனியில் லும்வேர்ட்ஸ் விற்பனை வளாகத்தில் கைத்தறி மற்றும் ஜவுளிகள் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்து பார்வையிட்டார். உடன் சேலம் சரக கைத்தறி துறை உதவி அலுவலர் விஜயலட்சுமி, நகர்மன்ற தலைவர் லட்சுமி, நாட்டான்மாது கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள், நெசவாளர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News October 31, 2025

தருமபுரி: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு

image

தருமபுரி மாவட்டத்தில் தற்போது மழை பெய்து வருவதால் கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News October 31, 2025

தர்மபுரி: 48 மணிநேரத்தில் இழந்த பணத்தை மீட்கலாம்!

image

ஆன்லைன் பொருட்கள் விற்பனை, பகுதிநேர வேலை எனப் பல வழிகளில் ஆன்லைன் மோசடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நீங்கள் பணத்தை இழந்தவுடன், உங்கள் பணம் மோசடியாளர் கணக்கிற்கு சென்றுவிடும். ஆனால் வங்கிகளுக்கிடையேயான பணப் பரிவர்த்தனைக்கு 48 மணிநேரம் ஆகும். எனவே, தருமபுரியில் உள்ள மக்களுக்கு இப்படி நடந்தால் 1930 என்ற எண்ணிலோ (அ) இந்த <>லிங்க் <<>>மூலமாகவோ புகார் அளித்து, வங்கிக்கு தகவல் அளித்தால், பணத்தை விரைவாக மீட்கலாம். ஷேர் பண்ணுங்க!

News October 31, 2025

தருமபுரி: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

image

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!