News March 23, 2025
தர்மபுரியில் நாளை வாகனங்களுக்கு ஏலம் அறிவிப்பு

தர்மபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”ஆயுதப்படையில் கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் நாளை (மார்ச் 24) ஏலம் விடப்பட உள்ளது. 6 இருசக்கர வாகனங்கள், 15 நான்கு சக்கர வாகனம் என மொத்தம் 21 வாகனங்களுக்கு தர்மபுரி மாவட்ட ஆயுதப்படை அலுவலக வளாகத்தில் காலை 8 மணிக்கு ஏலம் நடைபெறுகிறது. குறைந்த விலையில் வண்டி வாங்க விரும்பும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News April 19, 2025
போக்குவரத்துறையில் வேலை.. கடைசி வாய்ப்பு

மாநில மற்றும் சேலம் போக்குவரத்து கழகத்தில் உள்ள 804 காலிப்பணியிடங்கள் நிறப்பட உள்ளன. அதன்படி 01.07.2025 தேதியின்படி, 24 வயது நிறைந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத பேச தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் கட்டாயம். விருப்பமுள்ளவர்கள்<
News April 19, 2025
தருமபுரியில் இன்று மின்தடை அறிவிப்பு

தருமபுரியில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் காரணமாக தர்மபுரி நகரில் மதிக்கோன்பாளையம், காமாட்சியம்மன் தெரு, சந்தைப்பேட்டை, உழவர் சந்தை, டேக்கீஸ்பேட்டை, டவுன் போலீஸ் நிலையம், புரோக்கர் ஆபீஸ், வட்டார வளர்ச்சி காலனி, சில்வர் ஸ்பிரிங்ஸ் நகர், 4 ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின் வினியோகம் இருக்காது. ஷேர் பண்ணுங்க
News April 19, 2025
பாப்பாரப்பட்டி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

பாப்பாரப்பட்டி சொரக்காபட்டியைச் சேர்ந்த விவசாயி சீனிவாசன் 48, குடிப்பழக்கம் உடையவர். இதில் ஏற்பட்ட தகராறில் மனைவி சத்யா தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். மனைவியை மீண்டும் அழைத்தபோது வர மறுத்துவிட்டதால மனமுடைந்த அவர் கடந்த 8ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முன்றார். அவரை மீட்டு தர்மபுரி ஜிஹெச்சில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி சீனிவாசன் நேற்று உயிரிழந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.