News September 14, 2024

தர்மபுரியில் சத்துணவு அமைப்பாளர் பணியிடை நீக்கம்

image

தர்மபுரி அருகே கிட்டம்பட்டி தண்டாவில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் நேற்று மாவட்ட கலெக்டர் சாந்தி திடீர் ஆய்வு செய்தார். அப்போது அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பரிந்துரைக்கப்பட்ட பட்டியலின்படி பள்ளி மாணவ மாணவிகளுக்கு உணவு வழங்காத சத்துணவு அமைப்பாளர் மஞ்சுளாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். உடன் பிடிஓ சந்தியா கலைவாணி மற்றும் துறை அலுவலர்கள் இருந்தனர்.

Similar News

News December 1, 2025

தருமபுரி: 2,147 செவிலியர் பணியிடங்கள்- நேர்காணல் இல்லை!

image

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிறைவடைந்த பெண்கள் இதற்கு விண்பிக்கலாம். இந்த பணிக்கு நேர்காணல் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும். மேலும், மாதம் ரூ.19,500 – ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து டிச.14க்குள் விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு உடனே ஷேர் பண்ணுங்க

News December 1, 2025

தருமபுரி: தோட்டத்திற்கு சென்ற விவசாயிக்கு ஏற்பட்ட சோகம்!

image

மல்லசமுத்திரத்தை சேர்ந்த விவசாயி முனிவேல் (65), நேற்று முன்தினம் தோட்டத்திற்கு சென்றுள்ளார். ஆனால் மாலை நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில், சந்தேகமடைந்த குடும்பத்தார் தோட்டத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது கிணற்றின் அருகே மண் சரிந்துள்ளதை பார்த்துள்ளனர். அதன் அடிப்படையில் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், கிணற்றில் இறங்கிய வீரர்கள் முனிவேலின் சடலத்தை மீட்டு வந்தனர்.

News December 1, 2025

தருமபுரி: மினி லாரி மோதி தந்தை, மகன் பரிதாப பலி!

image

தருமபுரி: இருமத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் தனது மகன் திருஞானத்துடன் பைக்கில் வந்து கொண்டிருந்துள்ளார்.செங்கல்மேடு பகுதியில் வந்தபோது, பின்னல் வந்த மினி லாரி மோதியதில் நிலைதடுமாறி கிழே விழுந்தனர். இந்த விபத்தில் தந்தை மகன் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!