News May 3, 2024
தர்மபுரியில் கனமழைக்கு வாய்ப்பு

தர்மபுரியில் அடுத்த 4 நாட்களுக்கு (மே.6) இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தர்மபுரி மாவட்டத்தில் மே.7 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று (மே.02), தர்மபுரியில் ஓரிரு இடங்களில் காற்றுடன் பலத்த மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 20, 2025
தர்மபுரி மாவட்ட வட்டாட்சியர் எண்கள்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் எண்களை தெரிஞ்சிக்கோங்க மக்களே! நல்லம்பள்ளி -9384094838, 04342-244456, காரிமங்கலம்-9384094839, 04348-242411, தர்மபுரி -9445000533, 04342-260927, பென்னாகரம்-9445000536, 04342-255636, அரூர் – 9445000534, 04346-222023, பாப்பிரெட்டிப்பட்டி -9445000535, 04346-246544, பாலக்கோடு – 9445000537, 04348-222045. *முக்கிய நம்பர்களான இவற்றை நண்பர்களுக்கும் பகிருங்கள்*
News April 20, 2025
தருமபுரி: கணவன்/மனைவி சண்டை நீங்க செல்ல வேண்டிய கோவில்

தருமபுரியில் கோவில் கொண்டிருக்கும் கல்யாண காமாட்சி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். தமிழகத்தில் சூலினிக்காக அமைக்கப்பட்ட ஒரே கோவில். வளர்பிறை அஷ்டமியில் இங்கு சிறப்பு பூஜை செய்தால், கணவன்-மனைவிக்குள் எப்பேர் பட்ட சண்டையாய் இருந்தாலும் தீர்ந்து ஒற்றுமையாய் இருப்பர் என்பது பக்தர்களிள் அசைக்க முடியாத நம்பிக்கை. உங்கள் கணவன்/மனைவி அடிக்கடி சண்டை போட்டால் இங்கு செல்லுங்கள். *நண்பர்களுக்கும் பகிரவும்*
News April 20, 2025
தருமபுரி: சிறுமி உட்பட 2 பெண்கள் மாயம்

தருமபுரி, அரூர் அடுத்த மோப்பிரிப்பட்டியை சேர்ந்தவர் வேதமாஸ்ரீ(23), பி.இ. படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த 18 -ல் வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதேபோல், எச்.கோபிநாதம்பட்டியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு முடித்த 18 வயது சிறுமி 17 -ல் மாயமானர். அடுத்தடுத்து பெண்கள் மாயமான சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது கடத்தலா வேறு காரணமா என்ற கோணத்தில் அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.