News September 28, 2024
தர்மபுரியில் கடை அடைப்பு அறிவிப்பு

தருமபுரி காவிரி உபரி நீர் திட்டம் செயல்படுத்த கோரி வரும் அக்டோபர் 4 ஆம் தேதி காலை 6 மணிமுதல் நண்பகல் 12 மனி வரை தருமபுரி மாவட்டம் முழுவதும் அரை நாள் கடை அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. அதேசமயம் பென்னாகரத்தில் உள்ள அனைத்து வணிகர் சங்க பெருமக்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும் என பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினரும் பாமக கௌரவ தலைவருமான ஜி.கே.மணி அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News September 18, 2025
தர்மபுரியில் நூதன மோசடி… உஷார்!

பென்னாகரம் ஏரியூர் பகுதியில் அசோக் என்ற இளைஞருக்கு 8046852000 என்ற எண்ணில் இருந்து கால் வந்தது. யூபரில் இருசக்கர வாகனம் மூலம் ரைடர்ராக பணியை தொடங்கி மாதத்திற்கு 40 முதல் 60 ஆயிரம் வரை பணம் சம்பாதிக்கலாம் என கூறி பதிவு செய்ய 2000 ரூபாய் பணம் கட்ட வேண்டி இருப்பதாக கூறி மோசடி செய்துள்ளனர். யூபர் செயலில் பணிபுரிய முன்பணம் தேவையில்லை. இது போன்ற மோசடிகளில் ஏமாந்தால் 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்.
News September 18, 2025
தருமபுரி: வரப் போகுது மழை காலம்! இதை தெரிஞ்சுக்கோங்க

தருமபுரி மக்களே! மழை காலம் தொடங்க இருப்பதால், மின்சார சேவை அடிக்கடி பாதிக்கப்படும். அப்போது பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!
News September 18, 2025
தருமபுரி: பெண்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் மக்கள் அமைப்புகளின் திறன் மேம்பாட்டு தேவைகளுக்காக, மாவட்ட முகமையின் கீழ் தற்காலிகமாக ஒரு பயிற்சி மேலாளர் மற்றும் ஒரு கணக்காளர் நியமிக்கப்பட்டுள்ளனர். விருப்பமுள்ளவர்கள் தர்மபுரி திட்ட இயக்குனர், மகளிர் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் என்ற முகவரியை அணுகி விண்ணப்பிக்கலாம். தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க