News September 28, 2024
தர்மபுரியில் கடை அடைப்பு அறிவிப்பு

தருமபுரி காவிரி உபரி நீர் திட்டம் செயல்படுத்த கோரி வரும் அக்டோபர் 4 ஆம் தேதி காலை 6 மணிமுதல் நண்பகல் 12 மனி வரை தருமபுரி மாவட்டம் முழுவதும் அரை நாள் கடை அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. அதேசமயம் பென்னாகரத்தில் உள்ள அனைத்து வணிகர் சங்க பெருமக்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும் என பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினரும் பாமக கௌரவ தலைவருமான ஜி.கே.மணி அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News December 12, 2025
தருமபுரி: மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்! நாளை கடைசி நாள்!

தருமபுரி, நாளை (டிச.13) சனிக்கிழமை மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் தொன் போஸ்கோ கல்லூரியில் நடைபெறுகிறது. இம்முகாமில் பல்வேறு தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளது. இம்முகாமில் வேலை தேடும் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.மேலும், விவரங்களுக்கு 04342-288890 அழைக்கவும். இதை அனைவரும் ஷேர் பண்ணுங்க!
News December 12, 2025
தருமபுரி: பஸ், லாரி நேருக்கு நேர் மோதி விபத்து!

தருமபுரி, பாலக்கோடு வட்டத்தில் நள்ளிரவு 12:30 மணி அளவில் பாலக்கோடு அருகே கரகதஹள்ளியில், டாட்டா கம்பெனி பஸ் & லாரி ஆகிய வாகனங்கள் எதிரே மோதி விபத்துகுள்ளாது. இதில் 15 பேருக்கு லேசான காயமும், ஒருவருக்கு இறப்பும் நேர்ந்தது. இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பாகி, அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இதனை பாலக்கோடு காவலகத்துறை விசாரித்து வருகிறது.
News December 12, 2025
தருமபுரி: காவல்துறையின் இரவு ரோந்து விபரம்!

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நேற்று இரவு முதல், இன்று (டிச.12) காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்!


