News April 2, 2025

தர்மபுரியில் அடுத்த மாதம் ஜல்லிக்கட்டு?

image

வீரத்தமிழன் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் தர்மபுரி மாவட்டம் சோகத்தூர் பகுதியில் 20.5.2025 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக அழைப்பிதழ்கள் வெளியாகி உள்ளது. தர்மபுரியில் ஏற்கனவே ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு பணிகள் முடிந்து ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதி குறிப்பிடப்படாமல் ஒரு பிரிவு ஜல்லிக்கட்டு தொடங்காமல் நிலுவையில் உள்ளது.

Similar News

News December 16, 2025

தருமபுரி: காரில் குட்கா கடத்திய வடமாநில இளைஞர்!

image

தருமபுரி மாவட்டம் மதிகோன்பாளையம் போலீசார் குண்டலப்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் நாமக்கல்லுக்கு 56 கிலோ குட்கா கடத்தி வந்தது தெரிந்தது. இதுதொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரகுராம் (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து கார் மற்றும் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

News December 16, 2025

தருமபுரி: அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து!

image

பொம்மிடி அருகே துரிஞ்சிப்பட்டியைச் சேர்ந்த சதாசிவம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த பையர்நத்தத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த இரண்டு வாகனங்களும் சாலையோரம் நின்று கொண்டிருந்த மணிமேகலை மற்றும் அவரது மகன் அன்பரசு மீதும் மோதின. இந்த விபத்தில் ஓட்டுநர்கள் சதாசிவம், கோவிந்தராஜ் உட்பட 5பேரும் படுகாயமடைந்தனர்.

News December 16, 2025

தருமபுரி: காவல்துறையின் இரவு ரோந்து விபரம்!

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நேற்று இரவு – இன்று (டிச-16) காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்!

error: Content is protected !!