News May 7, 2025

தர்பூசணி பழத்தில் கலப்படம் இல்லை – தோட்டக்கலைத்துறை

image

தர்பூசணி பழங்களில் கலப்படம் செய்யப்படுவதாக உண்மைக்கு முரணான செய்தி பரவியது. இதையடுத்து தர்பூசணி அதிகம் விளையும் மாவட்டங்களில் உணவு பாதுகாப்புத் துறையினருடன் இணைந்து ரசாயன ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தர்பூசணி பழத்தில் சுவைக்காக செயற்கை ரசாயனம் கலப்படம் இல்லை என தெரிய வந்துள்ளது. எனவே மக்கள் தயக்கமின்றி தர்பூசணி பழங்களை சாப்பிடலாம். இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Similar News

News March 12, 2026

இராம்நாடு: உங்கள் வீட்டு பட்டா யார் பெயரில் இருக்கு?

image

இராம்நாடு மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என GoogleMap வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <>Tamil Nilam <<>>என்ற செயலியில் Location-ஐ ON செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE பண்ணுங்க

News March 12, 2026

ராம்நாடு : இனி PAN கார்டு தேவையில்லை..மத்திய அரசு

image

வீடு,மனை போன்ற 10 லட்சத்திற்கு மேற்பட்ட சொத்துக்களை பதிவு செய்யும் போது பான் எண் கட்டாயம் என தற்போது உள்ளது. இந்நிலையில்,ரூ.20 லட்சம் வரை சொத்துக்கள் வாங்கினால்,இனி பான் எண் கட்டாயமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.அதன்படி,ரூ.20 லட்சம் வரையிலான சொத்துக்களுக்கு பத்திரபதிவின் போது பான் எண் அளிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.இது வரும் ஏப்.1 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 12, 2026

ராமேஸ்வரத்தில் ஹோட்டல்கள் மூடல்

image

அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் போர் காரணமாக கேஸ் சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் ராமேஸ்வரம் பகுதியில் 20-ம் மேற்பட்ட ஹோட்டல்கள் நேற்று மூடப்பட்டன. பல்வேறு ஹோட்டல்கள் மூடப்பட்டதால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அவதி அடைந்தனர். மேலும் திறந்திருந்த கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. சிலிண்டர் தட்டுப்பாட்டை சரி செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.

error: Content is protected !!