News May 7, 2025

தர்பூசணி பழத்தில் கலப்படம் இல்லை – தோட்டக்கலைத்துறை

image

தர்பூசணி பழங்களில் கலப்படம் செய்யப்படுவதாக உண்மைக்கு முரணான செய்தி பரவியது. இதையடுத்து தர்பூசணி அதிகம் விளையும் மாவட்டங்களில் உணவு பாதுகாப்புத் துறையினருடன் இணைந்து ரசாயன ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தர்பூசணி பழத்தில் சுவைக்காக செயற்கை ரசாயனம் கலப்படம் இல்லை என தெரிய வந்துள்ளது. எனவே மக்கள் தயக்கமின்றி தர்பூசணி பழங்களை சாப்பிடலாம். இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Similar News

News December 14, 2025

BREAKING இராம்நாடு: குளத்தில் மூழ்கி தாய், மகன் இறப்பு

image

ஆந்திராவை சேர்ந்தவர் பென்சலம்மாள்(38), தனது 2 மகன்களுடன் இராமநாதபுரம். குயவன்குடி முருகன் கோயில் அருகே உள்ள குளத்தில் இன்று மதியம் குளிக்க சென்றார். இவரது மூத்த மகன் நவீன்(12) நீரில் மூழ்கியதை கண்டு பென்சலம்மாள், தண்ணீரில் இறங்கியுள்ளார். நவீனை(12) தேட முயற்சித்த பென்சலம்மாளும் தண்ணீரில் மூழ்கி இறந்து போனார். இருவரது உடல்களையும் கைப்பற்றிய கேணிக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 14, 2025

ராமநாதபுரம்: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

image

ராமநாதபுரம் மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04567-230036) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.

News December 14, 2025

ராமநாதபுரம்: GPay, PhonePe, Paytm Use பண்றீங்களா? கவனம்!

image

ராமநாதபுரம் மக்களே இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!