News May 7, 2025
தர்பூசணி பழத்தில் கலப்படம் இல்லை – தோட்டக்கலைத்துறை

தர்பூசணி பழங்களில் கலப்படம் செய்யப்படுவதாக உண்மைக்கு முரணான செய்தி பரவியது. இதையடுத்து தர்பூசணி அதிகம் விளையும் மாவட்டங்களில் உணவு பாதுகாப்புத் துறையினருடன் இணைந்து ரசாயன ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தர்பூசணி பழத்தில் சுவைக்காக செயற்கை ரசாயனம் கலப்படம் இல்லை என தெரிய வந்துள்ளது. எனவே மக்கள் தயக்கமின்றி தர்பூசணி பழங்களை சாப்பிடலாம். இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
Similar News
News December 5, 2025
பரமக்குடி மாணவி சாதனை

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எமனேஸ்வரம் பகுதியை சேர்ந்த மாணவிகள் மாநில அளவில் பளு தூக்கும் போட்டியில் 123 கிலோ எடையை தூக்கி தேசிய அளவில் போட்டிக்கு தேர்வாகி முதல் இடம் பிடித்துள்ளார். இதில் சுபாந்தினி, தேஜா மற்றும் ஸ்ரீநிதி ஆகிய மாணவிகள் வெங்கல பதக்கம் வென்றுள்ளனர். இவர்களுக்கு பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் பாராட்டு வருகின்றனர்.
News December 5, 2025
ராமநாதபுரம்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

ராமநாதபுரம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 5, 2025
ராமநாதபுரம்: டிகிரி முடித்தவர்கள் கவனத்திற்கு

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 14967 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. விண்ணப்ப கடைசி தேதி டிச. 4க்குள் முடிவடைந்த நிலையில், தற்போது கடைசி தேதி டிச. 11 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 18 – 45 வயதுக்குட்பட்ட 10th, 12th, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <


