News May 7, 2025
தர்பூசணி பழத்தில் கலப்படம் இல்லை – தோட்டக்கலைத்துறை

தர்பூசணி பழங்களில் கலப்படம் செய்யப்படுவதாக உண்மைக்கு முரணான செய்தி பரவியது. இதையடுத்து தர்பூசணி அதிகம் விளையும் மாவட்டங்களில் உணவு பாதுகாப்புத் துறையினருடன் இணைந்து ரசாயன ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தர்பூசணி பழத்தில் சுவைக்காக செயற்கை ரசாயனம் கலப்படம் இல்லை என தெரிய வந்துள்ளது. எனவே மக்கள் தயக்கமின்றி தர்பூசணி பழங்களை சாப்பிடலாம். இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
Similar News
News November 7, 2025
இராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கசென்ற மீனவர்களை கடந்த அக். 9 நள்ளிரவு இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 30 மீனவர்களின் வழக்கு இன்று மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரஃபீக் 26 மீனவர்கள் முதல்முறையாக கைது செய்யப்பட்டதால் தலா ரூ.2.50 லட்சம் அபராதமும், 2வது முறையாக சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 4 பேருக்கு தலா ரூ.2.75 லட்சம் அபராதம் விதித்தார்.
News November 7, 2025
ராமநாதபுரத்தில் மீனவர் குறை தீர் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட மீனவர் குறை தீர் நாள் கூட்டம் இன்று (நவ. 7) மாலை 3:30 மணியளவில் மாவட்ட ஆட்சியரக குறை கேட்பு கூட்ட அரங்கில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் அரசின் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்பதால் மீனவர்கள் தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவுறுத்தியுள்ளார்.
News November 6, 2025
ராமேஸ்வரம் ரயில் பயணிகளுக்கு முக்கிய அப்டேட்

மானாமதுரை – ராமேஸ்வரம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கும் காரணத்தினால் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் ராமேஸ்வரம் – மதுரை பகல் நேர ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. வண்டி எண் : 56714 இந்த ரயிலானது 7,8,9,10,12,14,15.11.2025 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது என தென்னக ரயில்வே துறை அறிவித்துள்ளது.


