News November 23, 2024

தருமபுரி மாவட்ட மக்கள் கவனத்திற்கு

image

தருமபுரி மாவட்டத்தில் இன்று (நவ 23) மற்றும் நாளை (நவ 24) ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர் அட்டையில் திருத்தம், பெயர் சேர்த்தல் உள்ளிட்டவைகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கலாம். மேலும், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டமும் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 22, 2025

தருமபுரி: வாடகை வீட்டில் பெண் தற்கொலை

image

நேற்று காரிமங்கலம் பாலக்கோடு ரோட்டில் வாடகை வீட்டில் குடியிருந்த கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியை சேர்ந்த சசி (வயது சுமார் 34) என்ற பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வைத்தனர். தற்கொலைக்கான காரணம் என்னவென்று அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் விசாரித்த வருகின்றனர்.

News November 22, 2025

தருமபுரி: உங்களிடம் ரேஷன் அட்டை உள்ளதா?

image

தருமபுரி மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க

News November 22, 2025

தருமபுரி: g-pay பயனாளர்களே இந்த Trick தெரிஞ்சிக்கோங்க!

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!