News November 23, 2024
தருமபுரி மாவட்ட மக்கள் கவனத்திற்கு

தருமபுரி மாவட்டத்தில் இன்று (நவ 23) மற்றும் நாளை (நவ 24) ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர் அட்டையில் திருத்தம், பெயர் சேர்த்தல் உள்ளிட்டவைகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கலாம். மேலும், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டமும் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 9, 2025
தருமபுரி: கல்வி பயிலும் இடத்தில் கைவரிசை

தருமபுரி, பாலக்கோடு அருகே கடந்த, 1ம் தேதி சோமனஹள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியரின் அறையின் பூட்டை உடைத்து, கம்ப்யூட்டர், பிரிண்டர் திருடு போனது. இந்நிலையில் வழக்கின் பெயரில் பாலக்கோடு போலீசார் பரத்குமார்(19), யோகக்குமார்(20), சேர்ந்த பார்த்-தசாரதி(20), ரமேஷ்(20), மற்றும் 18 வயது சிறுவன் ஆகிய 5 பேரை கைது செய்து. பின் அவர்கள் பயன்படுத்திய கார்கள் லேப்டாப் போன்றவைபறிமுதல் செய்தனர்.
News November 9, 2025
தருமபுரி: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

தருமபுரி, கிராம ஊராட்சி செயலாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்று (நவ.09) கடைசி நாள்
விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, சாதிச் சான்று. முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும். இனசுழற்சி, வயது மற்றும் கல்வி தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். மேற்படி விண்ணப்பபடிவம் www.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
News November 9, 2025
தருமபுரி: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

1)இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
2)விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
3)அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
4)பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு, உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


