News April 8, 2025

தருமபுரி மாவட்ட குறைத்தீர் கூட்டம் நிறைவு

image

தருமபுரி மாவட்டத்தில் (07/04/25) இன்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு பகுதி மக்களும் தங்களது குறைகளை எடுத்துரைத்து மனு வழங்கினர். இதில், பொதுமக்கள் இலவச பட்டா, இலவச வீட்டு மனை, இலவச ஸ்கூட்டர், மிதிவண்டி உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம் போன்ற 808 மனுக்களை வழங்கியுள்ளனர். இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சதீஷ் அறிவுறுத்தி உள்ளார்.

Similar News

News November 28, 2025

தர்மபுரி: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க!

image

அரசு பேருந்தில் பயணிக்கும் போது உங்க Luggage-ஐ மறந்துவிட்டு இறங்கிவிட்டால் பதட்டப்பட வேண்டாம். 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கு இருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன பொருளை தவறவிட்டீர்கள் என்ற விவரங்களுடன் டிக்கெட்டின் விவரத்தை கூறினால் போதும். அந்த பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து Luggage-ஐ வாங்க வேண்டுமென கூறுவார். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News November 28, 2025

தருமபுரி: உழவர் சந்தை விலை நிலவரம்!

image

தருமபுரி உழவர் சந்தையில் இன்றைய (நவ.28) காய்கறிகளின் விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி (1 கிலோ) தக்காளி: ரூ.46, கத்தரிக்காய்: ரூ.22, வெண்டைக்காய்: ரூ.25, முள்ளங்கி: ரூ.12, அவரைக்காய்: ரூ.46, கொத்தவரை: ரூ.30, பச்சைமிளகாய்: ரூ.28-30, பப்பாளி: ரூ.24, கொய்யா: ரூ.45 மற்றும் முருங்கைக்கீரை (50 கிராம்) ரூ.15 என விற்பனை செய்யப்படுகின்றன.

News November 28, 2025

தர்மபுரி: சித்திக்கு பாலியல் தொல்லை.. அடித்து கொன்ற தந்தை!

image

காரிமங்கலம், ஜொல்லம்பட்டியைச் சேர்ந்த ஜெய்சங்கரின் முதல் மனைவி மகன் சரவணன்(35), சித்தி சித்ராவுக்கு தொடர்ந்து பாலியல் வந்தார். இதனால் ஜெய்சங்கர்(தந்தை), மகன் கோவிந்தராஜ் மற்றும் அன்பரசு சேர்ந்து, 25ம் தேதி இரவு சரவணனை மேல் மாடியில் அடித்து கொலை செய்தனர். போலீசார் ஜெய்சங்கர் மற்றும் கோவிந்தராஜ், அன்பரசு ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!