News August 25, 2024
தருமபுரி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் காவலர்களுக்கு அறிவுரை

மேற்கு மண்டலத்திற்கு புதிதாக பொறுப்பேற்று கொண்ட மேற்கு மண்டல காவல்துறை தலைவர் T.செந்தில்குமார் தருமபுரி மாவட்ட ஆயுதப்படையில் ஆய்வு மேற்கொண்டு கவாத்து அணிவகுப்பை பார்வையிட்டு, காவலர்களின் நிறை குறைகளை கேட்டறிந்தார். மேலும் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார். இதில் தருமபுரி எஸ்.பி உட்பட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News October 31, 2025
மொரப்பூரில் நாளை ’நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் மருதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நாளை ( நவ. 01) சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை ’நலம் காக்கும் ஸ்டாலின்’ பல்துறை உயர் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் பல்வேறு பரிசோதனைகள் சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
News October 30, 2025
தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு (அக்-30) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்.
News October 30, 2025
தருமபுரி அருகே பூட்டை உடைத்து 12 பவுன் நகை கொள்ளை

ஆர்.கோபிநாதம்பட்டியை சேர்ந்த சரிதா சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகின்றார் நேற்று அக்.29 காலை வெளியில் சென்று விட்டு மாலை வீடு திரும்பிய போது அவரது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு பீரோ உள்ளே இருந்த 12 பவுன் நகை 250கிராம் வெள்ளி நகை திருடப்பட்டிருந்தது. இது குறித்து மொரப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், காவலர்கள் வழக்குப்பதிந்து கைரேகை நிபுணர்களைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


