News November 22, 2024
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி (தாட்கோ வங்கி) கிளைகளில் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு 7% சதவீத வட்டியில் ரூபாய் 20 லட்சம் வரை உற்பத்தி நடைமுறை மூலதன கடன்கள், இயந்திரங்கள் அசையா சொத்து அடமானத்தில் கடன் வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிவித்துள்ளார்.
Similar News
News October 19, 2025
தருமபுரி: திருக்குறள் முற்றோதல் – ஆட்சியர் அறிவிப்பு

தருமபுரி மாவட்டத்தில் திருக்குறள் முற்றோதல் – விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் அறிவித்துள்ளார். இதில், கலந்து கொள்ள விரும்பும் மாணவ மாணவியர் தமிழ் வளர்ச்சியின் tamilvalarchithurai.tn.gov.in என்ற வலைதளத்தில் விண்ணப்பித்து கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 19, 2025
தருமபுரி: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

தருமபுரி மாவட்டம் முழுவதும் (அக்.18) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்.
News October 18, 2025
தருமபுரி: சாலை விபத்தில் கணவன் மனைவி பலி

சேலம் செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த வெள்ளி வியாபாரி பாலசுப்பிரமணியன் (58) தனது மனைவி கவிதா (49) உடன் காரில் அரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, இருளப்பட்டி காணியம்மன் கோயில் அருகே சாலையை கடந்த ஒருவர் மீது மோதாமல் இருக்க, காரை திரும்பியதால், கார் தாறுமாறாக ஓடி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கணவன் மனைவி இருவரும் உயிரிழந்தனர்.