News April 4, 2025
தருமபுரி மாவட்டத்தில் மழை வெளுக்கும்

தருமபுரியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில் நேற்று, காரிமங்கலம், பென்னாகரம், இண்டூர், தீர்த்தமலை போன்ற பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நாளை (ஏப்ரல்.5) தருமபுரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அண்டை மாவட்டங்களான சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News November 7, 2025
தருமபுரி: திருமணத்திற்கு 1 பவுன் தங்கம், ரூ.25,000!

தருமபுரி மாவட்ட மக்களே! ஆதரவற்ற பெண்களுக்கு தமிழக அரசின் ‘அன்னை தெரசா நினைவு திருமண உதவி’ திட்டத்தின் கீழ் ரூ.25,000, 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. 2) இதற்கு உங்கள் மாவட்ட, பகுதி சமூக நல அலுவலரை அணுக வேண்டும். 3.திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்னரே விண்ணப்பிக்க வேண்டும். யாராவது ஒருவருக்காவது உதவும் ஷேர் பண்ணுங்க.
News November 7, 2025
பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின இளைஞர்களின் வேலைவாய்ப்பினை உறுதி செய்யும் நோக்கில் தொல்குடித் தொடுவானம் திட்டத்தின் கீழ்
08-11-2025 அன்று சேலம் மல்லூரில் உள்ள தி கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை பயிற்சிகள் அளிக்கப்படும்.18 வயது முதல் 33 வரையிலான ஆண்-பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். என ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
News November 7, 2025
சீர்மரபினர் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கும் திட்டம்

தருமபுரி மாவட்டத்தில், 2025-2026 கல்வியாண்டிற்கு வெளிநாடு சென்று படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கும் திட்டம் வெளியாகி உள்ளது. இந்த விவரங்களை www.tabcedco.tn.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து மத்திய கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பிக்கலாம். என்று ஆட்சியர் சதிஷ் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!


