News April 4, 2025

தருமபுரி மாவட்டத்தில் மழை வெளுக்கும்

image

தருமபுரியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில் நேற்று, காரிமங்கலம், பென்னாகரம், இண்டூர், தீர்த்தமலை போன்ற பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நாளை (ஏப்ரல்.5) தருமபுரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அண்டை மாவட்டங்களான சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

Similar News

News November 14, 2025

தருமபுரி இளைஞர்கள் கவனத்திற்கு..

image

தமிழக அரசின் திட்டத்தின் கீழ் படித்த வேலையற்ற இளைஞர்கள் வணிகம் தொடங்க ரூ.15 லட்சம் வரை வங்கிக் கடன் பெற்று, அதற்கு 25% மானியம் (அதிகபட்சம் ரூ.3.75 லட்சம்) பெறலாம். என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மளிகை, பெட்டிக் கடை, பேன்சி ஸ்டோர், மொபைல் கடை, வாகன உதிரிபாகங்கள் ஆகிய தொகுதிகள் செய்ய கடன் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு மேலே படத்தை பார்க்கவும் .

News November 14, 2025

தருமபுரி: லாரி கவிழ்ந்து விபத்து!

image

தருமபுரி, பாப்பாரப்பட்டி அருகே பிக்கிலி ஊராட்சியில் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதில் ஜல்லி ஏற்றி வந்த டிப்பர் லாரி பாப்பாரப்பட்டி அருகே நேற்று (நவ.13) காலை மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில், முத்தம்பட்டியை சேர்ந்த டிரைவர் ரமேஷ் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 14, 2025

தருமபுரி: இரவு நேர ரோந்துப் பணியில் காவலர்கள் விவரம்!

image

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (நவ.13) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் மகாலிங்கம் , தோப்பூரில் ராமகிருஷ்ணன் , மதிகோன்பாளையத்தில் ராமர் மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.

error: Content is protected !!