News April 4, 2025

தருமபுரி மாவட்டத்தில் மழை வெளுக்கும்

image

தருமபுரியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில் நேற்று, காரிமங்கலம், பென்னாகரம், இண்டூர், தீர்த்தமலை போன்ற பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நாளை (ஏப்ரல்.5) தருமபுரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அண்டை மாவட்டங்களான சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

Similar News

News October 18, 2025

தருமபுரி மக்களே வீடுகளில் இனி இது கட்டாயம்

image

தருமபுரி மக்களே அடுக்குமாடி குடியிருப்புகளை போல தனி வீடுகளுக்கு பார்க்கிங் கட்டாயம் என தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 3,300 சதுர அடி வரையிலான தனி வீடுகளில் 2 பைக், 2 கார்கள், 3,300 சதுரஅடிக்கு மேல் உள்ள வீட்டில் 4 பைக், 4 கார்கள் நிறுத்துமிடம் ஒதுக்குவது கட்டாயம் என விதிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. *தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*

News October 18, 2025

தருமபுரி : மக்களே ரயில்வேயில் வேலை ரெடி!

image

ரைட்ஸ் எனப்படும் ரயில்வே நிறுவனத்தில் சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் போன்ற பிரிவுகளில் காலியாக உள்ள 600 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பதவிகளுக்கு ஏற்ப தகுதிகள் மாறுபடும். இதற்கு 18- 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.16,000-ரூ 29,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.12க்குள் <>இந்த லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News October 18, 2025

தருமபுரி மக்களுக்கு நற்செய்தி

image

வடகிழக்கு பருவமழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் நவம்பர் 2025 மாதத்திற்குரிய அரிசியை அக்டோபர் 2025 மாதத்திலேயே பெற்றுக்கொள்ளலாம். இந்த வசதியினை தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களும் பயன்படுத்தி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!