News April 4, 2025
தருமபுரி மாவட்டத்தில் மழை வெளுக்கும்

தருமபுரியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில் நேற்று, காரிமங்கலம், பென்னாகரம், இண்டூர், தீர்த்தமலை போன்ற பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நாளை (ஏப்ரல்.5) தருமபுரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அண்டை மாவட்டங்களான சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News November 28, 2025
தர்மபுரி: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க!

அரசு பேருந்தில் பயணிக்கும் போது உங்க Luggage-ஐ மறந்துவிட்டு இறங்கிவிட்டால் பதட்டப்பட வேண்டாம். 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கு இருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன பொருளை தவறவிட்டீர்கள் என்ற விவரங்களுடன் டிக்கெட்டின் விவரத்தை கூறினால் போதும். அந்த பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து Luggage-ஐ வாங்க வேண்டுமென கூறுவார். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News November 28, 2025
தருமபுரி: உழவர் சந்தை விலை நிலவரம்!

தருமபுரி உழவர் சந்தையில் இன்றைய (நவ.28) காய்கறிகளின் விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி (1 கிலோ) தக்காளி: ரூ.46, கத்தரிக்காய்: ரூ.22, வெண்டைக்காய்: ரூ.25, முள்ளங்கி: ரூ.12, அவரைக்காய்: ரூ.46, கொத்தவரை: ரூ.30, பச்சைமிளகாய்: ரூ.28-30, பப்பாளி: ரூ.24, கொய்யா: ரூ.45 மற்றும் முருங்கைக்கீரை (50 கிராம்) ரூ.15 என விற்பனை செய்யப்படுகின்றன.
News November 28, 2025
தர்மபுரி: சித்திக்கு பாலியல் தொல்லை.. அடித்து கொன்ற தந்தை!

காரிமங்கலம், ஜொல்லம்பட்டியைச் சேர்ந்த ஜெய்சங்கரின் முதல் மனைவி மகன் சரவணன்(35), சித்தி சித்ராவுக்கு தொடர்ந்து பாலியல் வந்தார். இதனால் ஜெய்சங்கர்(தந்தை), மகன் கோவிந்தராஜ் மற்றும் அன்பரசு சேர்ந்து, 25ம் தேதி இரவு சரவணனை மேல் மாடியில் அடித்து கொலை செய்தனர். போலீசார் ஜெய்சங்கர் மற்றும் கோவிந்தராஜ், அன்பரசு ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


