News August 26, 2024
தருமபுரி அருகே வாகனம் மோதி முதியவர் பலி

காரிமங்கலம் அருகே முள்ளனூர் சாலையில் இன்று பந்தார அள்ளியை சேர்ந்த மாரியப்பன்(65) என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்த காரியமங்கலம் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 4, 2026
தருமபுரியில் வாடகை வீட்டுக்கு போறீங்களா? இது முக்கியம்!

தருமபுரியில், வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். ஷேர்!
News January 4, 2026
தருமபுரி: விதிமீறி செயல்பட்ட 16 மின்னணு தராசுகள் பறிமுதல்

தருமபுரி தொழிலாளா் நலத் துறை துணை ஆய்வாளா் அ.சு.சாந்தி தலைமையில் உதவி ஆய்வாளா்கள் ப.திவ்யா, முத்திரை ஆய்வாளா் வீ. தீபாபாரதி ஆகியோா் தருமபுரி பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனா். அதில் எடையில் குறைபாடு, முத்திரையிடப்படாதது என விதிமுறைகளை மீறி பயன்படுத்தப்பட்ட 16 மின்னணு தராசுகளை, தருமபுரி தொழிலாளா் துறையினா் பறிமுதல் செய்தனா். பின் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 4, 2026
தருமபுரி: ரயில்வேயில் 2,200 காலி பணியிடங்கள்! APPLY NOW

தருமபுரி மக்களே, ரயில்வே பணியில் சேர சூப்பர் வாய்ப்பு! ஆம், இந்தியன் ரயில்வேயில் குரூப் D 2,200 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 10ம் வகுப்பு முடித்து, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ. 18,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் ஜன.29ம் தேதிக்குள் இந்த <


