News August 26, 2024

தருமபுரி அருகே வாகனம் மோதி முதியவர் பலி

image

காரிமங்கலம் அருகே முள்ளனூர் சாலையில் இன்று பந்தார அள்ளியை சேர்ந்த மாரியப்பன்(65) என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்த காரியமங்கலம் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 15, 2025

தருமபுரியில் இலகுரக வாகன ஏலம் அறிவிப்பு!

image

தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் கட்டுபாட்டில் இருந்து வந்த வருவாய்த்துறையைச் சேர்ந்த வாகனமான TN29G7777- ஆனது கழிவு செய்யப்பட்டு, ஏலம் விட ஆரம்ப தொகையாக ரூ.14,000/- நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேற்படி கழிவு செய்யப்பட்ட வாகனத்தினை 17.12.2025 அன்று முற்பகல் 11 மணியளவில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் தெரிவித்துள்ளார்.

News December 14, 2025

தருமபுரி: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

image

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (டிச.14) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சூர்யா தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் நாகராஜ் , தோப்பூரில் கேசவன், மதிகோன்பாளையத்தில் சின்னசாமி மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். இரவு வேலை செய்யும் பெண்களுக்கு பகிரவும்.

News December 14, 2025

தருமபுரி: ரூ.1.1 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

image

மத்திய அரசின் டிஆர்டிஓ-வில் 17 வகை பிரிவுகளின் கீழ் 764 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஐடிஐ, டிப்ளமோ, BE, B.Sc படித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.19,900-ரூ.1,12,400 வரை வழங்கப்படும். 18-28 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. விருப்பமுள்ளவர்கள் ஜன.1ஆம் தேதிக்குள்<> இங்கு கிளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!