News August 26, 2024
தருமபுரி அருகே வாகனம் மோதி முதியவர் பலி

காரிமங்கலம் அருகே முள்ளனூர் சாலையில் இன்று பந்தார அள்ளியை சேர்ந்த மாரியப்பன்(65) என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்த காரியமங்கலம் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 18, 2025
தருமபுரி: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க!

அரசு பேருந்தில் பயணிக்கும் போது உங்க Luggage-ஐ மறந்துவிட்டு இறங்கிவிட்டால் பதட்டப்பட வேண்டாம். 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கு இருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன பொருளை தவறவிட்டீர்கள் என்ற விவரங்களுடன் டிக்கெட்டின் விவரத்தை கூறினால் போதும். அந்த பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து Luggage-ஐ வாங்க வேண்டுமென கூறுவார். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News December 18, 2025
JUST IN: தொப்பூரில் 2 லாரிகள் மோதி விபத்து!

தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், சூரத்திலிருந்து ஈரோட்டிற்கு லோடு ஏற்றி வந்த கண்டைனர் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்று கொண்டிருந்த சிமெண்ட் லாரி மீது மோதி, தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக ஓட்டுனர்கள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். மேலும் இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
News December 18, 2025
தருமபுரி: பால் பண்ணை அமைக்க ரூ.1.67 லட்சம்!

1) தருமபுரி மக்களே., மத்திய அரசின் DEDS திட்டத்தின் மூலம் பால் பண்ணை தொடங்க மானியத்துடன் ரூ.1.67 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. 2) பால் பண்ணை, பால் சார்ந்த பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்டவைக்கு மானியம் வழங்கப்படும். 3)கடனை திரும்பச் செலுத்த 6 மாதம் – 3 ஆண்டுகள் வரை சலுகை காலம் சில இடங்களில் உண்டு. 4) இதற்கு விண்ணப்பிக்க நபார்டு வங்கி, கூட்டுறவு வங்கிகள், தேசிய வங்கிகளை அணுகவும். (SHARE)


