News August 26, 2024
தருமபுரி அருகே மூதாட்டியிடம் தகராறு செய்த இளைஞர்கள்

மாரண்டஅள்ளி அடுத்த கரிக்குட்டனூர் கிராமத்தை சேர்ந்த லட்சுமி (60), நேற்று மலையடிவாரத்தில் ஆடு மேய்க்கும் போது ஆண்டிமுத்து (29), மருதன் (24) ஆகியோர் போதையில் மூதாட்டியை மது அருந்த அழைத்துள்ளனர். அதற்கு அவர் மறுக்கவே அவர்கள் இருவரும் அவரிடம் தகராறு செய்துள்ளனர். அலறல் சத்தம் கேட்டு அருகில் வந்தவர்கள் மூதாட்டியை மீட்டுள்ளனர். புகாரின் பேரில் இவர்மீது மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Similar News
News November 17, 2025
தருமபுரி: கடன் தொல்லை நீங்க இங்கே செல்லுங்கள்

தருமபுரி மாவட்டம் தீர்த்தமலையில் பிரசித்தி பெற்ற தீர்த்தகிரீசுவரர் திருக்கோயில் உள்ளது. கடன் தொல்லை உள்ளவர்கள் அமாவாசைக்கு அடுத்த நாள் இந்த இறைவனை தரிசனம் செய்தால் கடன் தொல்லை நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. மேலும், கடன் தொல்லையால் அவதி அடைந்தவர்கள் இங்கு சென்று வழிபட்டதால் தற்போது நல்லவாழ்வு வாழ்வதாக கூறுகின்றனர். கடன் தொல்லை உள்ளவர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க.
News November 17, 2025
தருமபுரி: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க
News November 17, 2025
தருமபுரி: சுயதொழில் தொடங்க SUPER IDEA!

சுயதொழில் தொடங்க ஆசையா? கவலைய விடுங்க! தமிழக அரசு, மாவரைக்கும் இயந்திரம், நிலக்கடலை தோல் உரிக்கும் இயந்திரம், எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு இயந்திரம் உட்பட பல்வேறு இயந்திரகளை வாங்குவதற்கு, உழவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்குகிறது. விருப்பமுள்ள நபர்கள்<


