News August 26, 2024
தருமபுரி அருகே மூதாட்டியிடம் தகராறு செய்த இளைஞர்கள்

மாரண்டஅள்ளி அடுத்த கரிக்குட்டனூர் கிராமத்தை சேர்ந்த லட்சுமி (60), நேற்று மலையடிவாரத்தில் ஆடு மேய்க்கும் போது ஆண்டிமுத்து (29), மருதன் (24) ஆகியோர் போதையில் மூதாட்டியை மது அருந்த அழைத்துள்ளனர். அதற்கு அவர் மறுக்கவே அவர்கள் இருவரும் அவரிடம் தகராறு செய்துள்ளனர். அலறல் சத்தம் கேட்டு அருகில் வந்தவர்கள் மூதாட்டியை மீட்டுள்ளனர். புகாரின் பேரில் இவர்மீது மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Similar News
News December 21, 2025
தருமபுரி வாக்காளர்களுக்கு சிறப்பு முகாம்!

தருமபுரி மாவட்ட பொதுமக்களுக்கு அறிய வாய்ப்பு, SIR திட்டத்தில் வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களுக்காக, புதிய வாக்காளர்கள் சேர்தல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதனை அந்தந்த வாக்குச்சாவடி மையத்தில் வரும் டிச.27 (சனி), டிச.28 (ஞாயிறு) மற்றும் ஜன.03 (சனி), ஜன.04 (ஞாயிறு) ஆகிய 4 நாட்களில் நடைபெறுகிறது. மேலும்,வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, மாறுதல் செய்ய அணுகலாம்.
News December 21, 2025
தருமபுரியை உலுக்கிய பெரும் சோகம்!

தருமபுரி, கொண்டகரஅள்ளி பகுதியை சேர்ந்த காவியா (17), தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு பாராமெடிக்கல் மயக்கவியல் (Anaesthesia Technology) பயின்று வருகிறார். பள்ளிப் படிப்பைத் தமிழ் வழியில் முடித்திருந்த அவர், மருத்துவப் பாடங்கள் ஆங்கிலத்தில் இருந்ததால் அவற்றைப் புரிந்துகொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான காவியா நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்டார்.
News December 21, 2025
தருமபுரி: gpay, phonepay பயனாளர்கள் கவனத்திற்கு!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!


