News August 17, 2024
தருமபுரி அரசு கல்லூரியில் பொது கலந்தாய்வு

தர்மபுரி அரசு கல்லூரி முதல்வர் கண்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் 2024 நடப்பு கல்வி ஆண்டில் முதுநிலை பட்ட மேற்படிப்புக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆகஸ்ட் 19 காலை 10 மணிக்கு கல்லூரி கலை அரங்கில் நடைபெறுகிறது. இதில் முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் தரவரிசைப்படி ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News November 25, 2025
தருமபுரி: மின்சாரம் தாக்கி பெண் பலி!

கடத்தூர் அருகே உள்ள ஒடசல்பட்டியில், ஆட்டுக் கொட்டகைக்குச் சென்ற ஜெயக்கொடி (41) என்பவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். மயங்கி கிடந்த மனைவியை காப்பாற்ற முயன்ற கணவர் மாரியப்பனுக்கும் லேசான மின்சாரம் பாய்ந்தது. உடனடியாக அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
News November 25, 2025
தருமபுரி: மின்சாரம் தாக்கி பெண் பலி!

கடத்தூர் அருகே உள்ள ஒடசல்பட்டியில், ஆட்டுக் கொட்டகைக்குச் சென்ற ஜெயக்கொடி (41) என்பவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். மயங்கி கிடந்த மனைவியை காப்பாற்ற முயன்ற கணவர் மாரியப்பனுக்கும் லேசான மின்சாரம் பாய்ந்தது. உடனடியாக அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
News November 25, 2025
தருமபுரி: சட்டவிரோத டீசல் விற்பனை: ஒருவர் கைது

காரிமங்கலம் பகுதிகளில் சட்டவிரோத டீசல் விற்பனை நடப்பதாக நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொன்னேரி பகுதியில் சென்றபோது அங்கே சட்டவிரோதமாக டீசலை பதுக்கி விற்பனை செய்து கொண்டிருந்த செல்வராஜ் 40 என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 25 லிட்டர் டீசலை பறிமுதல் செய்தனர்.


