News December 6, 2024
தருமபுரியில் நாளை எங்கெல்லாம் மின்தடை?

தருமபுரி மாவட்டத்தில் நாளை மின் பராமரிப்பு பணி காரணமாக, இலக்கியம்பட்டி, ராமியனஅள்ளி, பாரதிபுரம், உங்கரானஅள்ளி, சிந்தல்பாடி, பசுவபுரம், காவேரிபுரம், வெங்கட்டம்பட்டி, தேவரசம்பட்டி, சுற்றுப்புற பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 5மணி வரையும் அரூர், எட்டிப்பட்டி, அழகிரிநகர், பெத்தூர், சந்தைப்பட்டி, அச்சல்வாடி, ஓடசல்பட்டி, சின்னகுப்பம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 6, 2025
தருமபுரி:30டன் ரேஷன் அரிசி கடத்தல் -ஒருவர் கைது!

பென்னாகரம் பிரதான சாலையில் சந்தேகத்திற்கிடமாக நிறுத்தப்பட்டிருந்த லாரியில் ர. (TN34V4487) சோதனை செய்தபோது பொக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பொது விநியோகதிட்ட ரேஷன் அரிசி 600 முட்டைகளில் மொத்தமாக 30,000 கிலோ (30டன்) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அந்த வாகனம் மற்றும் கடத்தப்பட்ட ரேஷன் அரிசியை கைப்பற்றி சாமிசெட்டிப்பட்டி சேர்ந்த ஆனந்தகுமார் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News December 6, 2025
தருமபுரி:போலி மருத்துவர் கைது!

தருமபுரி மருத்துவம் & ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர் சாந்தி தலைமையில், போலி மருத்துவர்கள் ஒழிப்புக் குழுவினர் அதியமான்கோட்டையில் கிளினிக் வைத்து நடத்திவந்த ஒரு வீட்டில் நேற்று ஆய்வு செய்தனர்.அங்கு கணேசன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது.மருத்துவக் குழுவினர் விசாரணையில், அவர் பிளஸ் 2 வரை படித்த நிலையில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்ததை எடுத்து காவலர்கள் அவரை கைது செய்தனர்.
News December 6, 2025
தருமபுரி:அரசு வழக்கறிஞர் (கல்பனா) லஞ்சம் வாங்கி கைது !

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பையர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த வீரய்யன் என்பவரின் மகளுக்கு பாலியல் தொந்தரவுக்கு ஆளான சிறுமி வழக்கு அவரது தந்தையிடம் ரூபாய் 10,000 லஞ்சம் வாங்கிய தர்மபுரி போக்ஸோ நீதிமன்ற அரசு வக்கீல் கல்பனா என்பரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நேற்று டிச-5 கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை.


