News August 19, 2024

தருமபுரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தருமபுரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், தென்கரைக்கோட்டை, கோபிநாதம்பட்டி, கூட்டோடு, பாப்பிரெட்டிப்பட்டி, நல்லம்பள்ளி, பாலக்கோடு, பென்னாகரம், அரூர், காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

Similar News

News November 25, 2025

தருமபுரி: மின்சாரம் தாக்கி பெண் பலி!

image

கடத்தூர் அருகே உள்ள ஒடசல்பட்டியில், ஆட்டுக் கொட்டகைக்குச் சென்ற ஜெயக்கொடி (41) என்பவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். மயங்கி கிடந்த மனைவியை காப்பாற்ற முயன்ற கணவர் மாரியப்பனுக்கும் லேசான மின்சாரம் பாய்ந்தது. உடனடியாக அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

News November 25, 2025

தருமபுரி: மின்சாரம் தாக்கி பெண் பலி!

image

கடத்தூர் அருகே உள்ள ஒடசல்பட்டியில், ஆட்டுக் கொட்டகைக்குச் சென்ற ஜெயக்கொடி (41) என்பவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். மயங்கி கிடந்த மனைவியை காப்பாற்ற முயன்ற கணவர் மாரியப்பனுக்கும் லேசான மின்சாரம் பாய்ந்தது. உடனடியாக அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

News November 25, 2025

தருமபுரி: சட்டவிரோத டீசல் விற்பனை: ஒருவர் கைது

image

காரிமங்கலம் பகுதிகளில் சட்டவிரோத டீசல் விற்பனை நடப்பதாக நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொன்னேரி பகுதியில் சென்றபோது அங்கே சட்டவிரோதமாக டீசலை பதுக்கி விற்பனை செய்து கொண்டிருந்த செல்வராஜ் 40 என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 25 லிட்டர் டீசலை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!