News August 14, 2024
தருமபுரியில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு

தருமபுரி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணிவரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்தது. அண்மையில் பெய்த மழையால், குடியிருப்பு பகுதிகளில் முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. இன்று இரவு கனமழை பெய்யும் என்பதால், தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது.
Similar News
News December 3, 2025
தருமபுரி: பைக்கில் சென்றவர் சாலை விபத்தில் பலி!

தருமபுரி, பஞ்சாப்பள்ளி அடுத்த ஒட்டர்தின்னை கிராமத்தை சேர்ந்தவர் ஆஞ்சி (35), கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் ஆஞ்சி ராயக்கோட்டை செல்லவேண்டி கூலிக்கானூர்-சூடானூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென முன்னே சென்ற டிராக்டரில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த பஞ்சப்பள்ளி போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
News December 3, 2025
தருமபுரியில் கனமழை வெளுக்கும்!

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வரும் நிலையில் குளிர்ச்சியான சூழ்ல் நிலவி வந்தது. இந்நிலையில் நாளை (டிச.04) தருமபுரி மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே நாளை வேலைக்கு மற்றும் பள்ளி, கல்லூரிக்கு செல்வோர் அதற்கு ஏற்றவாறு தங்களின் பயனத்தை அமைத்து கொள்ளவும். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News December 3, 2025
தருமபுரி: SBI வங்கியில் வேலை! APPLY NOW

தருமபுரி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணி: Customer Relationship Executive
2. கல்வித் தகுதி: Any Degree.
3. கடைசி தேதி : 23.12.2025.
4. சம்பளம்: ரூ.51,000 வழங்கப்படும்.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE பண்ணுங்க!


