News October 24, 2024

தருமபுரியில் அக்.29ஆம் தேதி வரை மழை

image

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த டானா புயல், நாளை (அக்.25) காலை ஒடிசா, மேற்குவங்கம் இடையே புரி- சாகர் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், இன்று (அக்.24) தர்மபுரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், அக்.29ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.

Similar News

News July 8, 2025

தர்மபுரி: உள்ளூரில் வங்கி அதிகாரி வேலை

image

பேங்க் ஆப் பரோடா வங்கியில் ‘லோக்கல் பேங்க் ஆபிசர்’ எனப்படும் உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 2,500 பணியிடங்கள் நிரப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் 60 பணியிடங்கள் உள்ளன. ரூ.48,480 – 85,920 வரை. சம்பளம் வழங்கப்படும். தமிழ் தெரிந்திருக்க வேண்டும். டிகிரி இருந்தால் போதும் ஜூலை 24ஆம் தேதிக்குள் <>இந்த லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News July 8, 2025

தர்மபுரி முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

தமிழ்நாடு அரசின் சார்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தர்மபுரி மாவட்டம் முழுவதும் வரும் 15 ஆம் தேதி முதல் அக்.15 வரை 176 முகாம்கள் நடைபெற உள்ளன. இம்முகாமில், பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் மகளிர் உரிமைத் தொகை குறித்த மனுக்களையும் வழங்கலாம். *இந்த முகாமில் வழங்கப்படும் மனுக்கள் மது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, அனைவரும் தவறாது கலந்துகொள்ளுங்கள். நண்பர்களுக்கு பகிருங்கள்*

News July 8, 2025

நலத்திட்டங்களை வழங்கிய உழவர் நலத்துறை அமைச்சர்

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் புதிய கூடுதல் அலுவலகத்தில் வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர் .எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஸ், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!