News April 23, 2025

தருமபுரிக்கு பெருமை சேர்ந்த இளைஞர்

image

நாடு முழுவதும் நேற்று யுபிஎஸ்சி தேர்வு முடிகள் நேற்று வெளியான நிலையில், தமிழக அளவில் தருமபுரியை சேர்ந்த சிவசந்திரன் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். மாநில அளவில் முதலிடமும், தேசியளவில் 23-ம் இடத்தையும் பிடித்துள்ளார். 4 முறை யுபிஎஸ்சி தேர்வில் தோல்வி அடைந்த நிலையில், 5ஆவது முறையாக தேர்வு எழுதி சாதித்துள்ளார். தருமபுரிக்கு பெருமை சேர்த்த சிவசந்திரனை பற்றி மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க

Similar News

News December 4, 2025

தருமபுரி: குடி பழக்கத்தால் நேர்ந்த விபரீதம்!

image

தருமபுரி மாவட்டம் நீலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி கிருஷ்ணன் (43), மதுப் பழக்கத்தால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் தனியறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கதவை உடைத்து பார்த்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இந்தச் சம்பவம் குறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 4, 2025

தருமபுரி: மின்சாரம் தாக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி!

image

தருமபுரி மாவட்டம், இண்டூர் அருகே தாளப்பள்ளத்தில் உள்ள காகித ஆலையின் திறப்பு விழாவில் சுவிட்ச் பெட்டிக்கு அலங்காரம் செய்தபோது பாஞ்சாலை (52) மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மேலும், மாரண்டஅள்ளி அருகே மோட்டார் சுவிட்சை இயக்க முயன்றபோது நாராயணன் (37) என்பவரும் மின்சாரம் தாக்கி பலியானார். இந்த இரு சம்பவங்கள் குறித்தும் தனித்தனியாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 4, 2025

தருமபுரி: கல்லூரி மாணவர் மருந்து குடித்து தற்கொலை!

image

காரிமங்கலம் அருகே வலைய கார பள்ளம் கிராமத்தில் கல்லூரி மாணவர் ஜீவா (18) முள்ளங்கி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். தகவலறிந்த உறவினர்கள் அவரை மீட்டு காரிமங்கலம் ஜி.ஹெச்-சுக்கு கொண்டு வந்தனர். ஆனால் அவரைப் பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதை தொடர்ந்து போலீசார் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!