News April 23, 2025
தருமபுரிக்கு பெருமை சேர்ந்த இளைஞர்

நாடு முழுவதும் நேற்று யுபிஎஸ்சி தேர்வு முடிகள் நேற்று வெளியான நிலையில், தமிழக அளவில் தருமபுரியை சேர்ந்த சிவசந்திரன் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். மாநில அளவில் முதலிடமும், தேசியளவில் 23-ம் இடத்தையும் பிடித்துள்ளார். 4 முறை யுபிஎஸ்சி தேர்வில் தோல்வி அடைந்த நிலையில், 5ஆவது முறையாக தேர்வு எழுதி சாதித்துள்ளார். தருமபுரிக்கு பெருமை சேர்த்த சிவசந்திரனை பற்றி மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க
Similar News
News September 17, 2025
ரூ.356.48 கோடி ஓய்வூதியம்; ஆட்சியர் தகவல்

தருமபுரி மாவட்டத்தில் கடந்த நான்காண்டுகளில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் தேசிய முதியோர் ஓய்வூதியம், ஆதரவற்ற கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியம், ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம்,தமிழர்களுக்கான ஓய்வூதியம் என 59,365 நபர்களுக்கு ரூ.356.48 கோடி ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது.என ஆட்சியர் சதிஸ் தெரிவித்துள்ளார்.
News September 17, 2025
தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (செப்.17) இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக ராஜா சுந்தர் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News September 17, 2025
தருமபுரி: 10th போதும், மத்திய அரசு வேலை!

மத்திய புலனாய்வு துறையில் காலியாக உள்ள பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு 455 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, 1.கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி, 2.சம்பளம்: ரூ.21,700-ரூ.69,100, 3.வயது வரம்பு: 18-27 வரை (கணவரை இழந்த பெண்கள், விவகாரத்து பெற்றவர்கள், சட்டப்படி பிரிந்து வாழ்பவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு) கடைசி தேதி: செப்டம்பர் 28 இந்த <