News February 15, 2025

தருமபுரிக்கு புதிய தொழில் பூங்கா (SIPCOT) 

image

தர்மபுரி பிப்15 மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் ஆட்சியர் சதீஷ்குமார் தெரிவித்தாவது, தருமபுரி மாவட்டத்தின் அதகபாடி பகுதியில், 1,733 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழில் பூங்கா (SIPCOT) அமைய உள்ளது. பல முன்னணி நிறுவனங்களான OLA ATHER ENERGY, TVS, TITAN, e-MAN AUTOMOTIVE அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளன. இதனால் இம்மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

Similar News

News July 11, 2025

தர்மபுரியில் நாட்டுக் கோழி வளர்ப்பு பயிற்சி

image

தர்மபுரி வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் 26 நாட்கள் நாட்டுக்கோழி திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஆர்வமுள்ள விவசாயிகள் தங்கள் பெயரை TNSDC இணையத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இப்பயிற்சி வருகின்ற 14/7/2025-12/8/2025 வரை நடைபெறும். மேலும் தகவலுக்கு 9677565230 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தவறாமல் கலந்துகொள்ளுங்கள் மக்களே. நிட்சயம் உதவியாக இருக்கும். ஷேர் பண்ணுங்க

News July 11, 2025

நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) அலுவலகத்தில் பொது ஏலம்

image

தருமபுரி மாவட்ட உதவி செயற்பொறியாளர (சா ம பா),தருமபுரி மற்றும் மொரப்பூர் உபகோட்ட அலுவலக பயன்பாட்டில் இருந்து கழிவுநீக்கம் (Scrapping) செய்யப்பட்ட ஈர்ப்பு எண் TN 29 G 0470 (Tata Spacio (D) TN 29G 0472 (Bolero Lx (D) ) ஆகிய 2 வாகனங்கள் வரும் 18 அன்று பிற்பகல் 12.00 மணி அளவில் தருமபுரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படவுள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்

News July 11, 2025

ரூ. 12 லட்சம் நிதி உதவி வழங்கும் திட்டம்

image

தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் நபர் ஒருவருக்கு ரூ.10,000/- வீதம் 120 நபர்களுக்கு ரூ. 12 லட்சம் நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு, பயன்பெற விரும்பும் புத்த, சமண மற்றும் சீக்கியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை 30.11.2025க்குள் அனுப்ப வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!