News August 3, 2024
தயார் நிலையில் மீட்பு குழுவினர் – நீலகிரி எஸ்பி தகவல்

நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில், பருவ மழை பாதிப்பை எதிர் கொள்ளும் வகையில், ஒவ்வொரு உட்கோட்டங்களிலும் பயிற்சி பெற்ற 10 பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் தெரிவித்துள்ளார். மேலும், பொதுமக்கள் எந்த நேரத்திலும் 0423 2444111 என்ற எண்ணை அணுகலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 13, 2025
உதகை அருகே அரசு பேருந்து விபத்து!

நீலகிரி: உதகையிலிருந்து பெந்தட்டி கிராமம் நோக்கி 40 பேருடன் சென்ற பேருந்து, பாரஸ்ட் கேட் பகுதியில் எதிரே வந்த லாரிக்கு இடம் கொடுக்கும் போது அருகிலிருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. மின்கம்பம் பேருந்தின் மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் தீங்கு ஏற்படவில்லை. சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
News December 13, 2025
அருவங்காடு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்!

குன்னூர், பழைய அருவங்காடு பகுதிகளில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. சமீபகாலமாக இங்குள்ள வளர்ப்பு நாய்கள் மாயமான நிலையில், அவற்றை சிறுத்தை வேட்டையாடி சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்நிலையின் தொடர்ச்சியாக, மீண்டும் இரவு நேரத்தில் இப்பகுதிக்கு வந்த சிறுத்தை, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதுடன், அங்கிருந்த பாத்திரங்களையும் உருட்டிவிட்டு சென்றுள்ளது.
News December 13, 2025
அருவங்காடு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்!

குன்னூர், பழைய அருவங்காடு பகுதிகளில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. சமீபகாலமாக இங்குள்ள வளர்ப்பு நாய்கள் மாயமான நிலையில், அவற்றை சிறுத்தை வேட்டையாடி சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்நிலையின் தொடர்ச்சியாக, மீண்டும் இரவு நேரத்தில் இப்பகுதிக்கு வந்த சிறுத்தை, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதுடன், அங்கிருந்த பாத்திரங்களையும் உருட்டிவிட்டு சென்றுள்ளது.


