News April 22, 2025

தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைது

image

குலசேகரன் புதூரைச் சேர்ந்தவர் சுடலையாண்டி. இவருடைய அண்ணன் இசக்கியப்பன். இவர்கள் இடையே சொத்து தொடர்பாக பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில் தம்பியிடம் வீட்டை எனக்கு எழுதித்தருமாறு அவரது அண்ணன் கேட்டு கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் இசக்கியப்பன் சுடலையாண்டியை கத்தியால் குத்தினார். இது தொடர்பாக சுசீந்திரம் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து இசக்கியப்பனை கைது செய்தனர்

Similar News

News September 17, 2025

நாகர்கோவிலில் வேலைவாய்ப்பு முகாம்

image

குமரி ஆட்சியர் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் நாகர்கோவிலில் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமானது நடைபெற்று வருகிறது. இம்மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமானது நாகர்கோவில் கோணத்தில் செப்.19 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளதாக ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.

News September 16, 2025

குமரியில் கல்வி கடன் மேளா அறிவிப்பு

image

குமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் 2-வது கல்விக் கடன் மேளா செப்.18 அன்று கருங்கல் பெத்லஹேம் பொறியியல் கல்லூரியில் காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. மேற்படி முகாமில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, கூட்டுறவு வங்கி மற்றும் தனியார் வங்கிகளும் பங்கேற்கின்றன என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.

News September 16, 2025

குமரி: உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்ட MLA ராஜேஷ்

image

மத்திய அரசை கண்டித்தும், தேர்தல் ஆணையத்தை கண்டித்தும் கிள்ளியூர் வட்டார ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கத்தின் சார்பாக கிள்ளியூர் வட்டார RGPRS தலைவர் P. பிரேம் சிங் தலைமையில் தொலையாவட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் இன்று (செப். 16) நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் கலந்து கொண்டார்.

error: Content is protected !!