News April 22, 2025
தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைது

குலசேகரன் புதூரைச் சேர்ந்தவர் சுடலையாண்டி. இவருடைய அண்ணன் இசக்கியப்பன். இவர்கள் இடையே சொத்து தொடர்பாக பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில் தம்பியிடம் வீட்டை எனக்கு எழுதித்தருமாறு அவரது அண்ணன் கேட்டு கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் இசக்கியப்பன் சுடலையாண்டியை கத்தியால் குத்தினார். இது தொடர்பாக சுசீந்திரம் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து இசக்கியப்பனை கைது செய்தனர்
Similar News
News November 20, 2025
குமரி மக்களே.. PF குறைதீர் கூட்டம் தேதி அறிவிப்பு

வருங்கால வைப்பு நிதி நிறுவனம், நாகர்கோவில் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் ஆகிய இணைந்து நடத்தும் வைப்பு நிதி உங்கள் அருகில் வருங்கால வைப்பு நிதி குறை தீர்க்கும் கூட்டம் நவ.27ம் தேதி அன்று அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. இந்த முகாமில் வைப்பு நிதி உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், தொழில் நிறுவனங்கள் பங்கேற்று பயன்பெறலாம் என குமரி வைப்பு நிதி ஆணையர் கூறினார்.
News November 20, 2025
குமரியில் 860 பேர் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் நாகர்கோவில் நகரில் மட்டும் போக்குவரத்து விதி மீறல்களுக்காக ஒரு கோடியே 86 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்ததாக 860 பேரும் இது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்று போக்குவரத்து போலீசார் நேற்று தெரிவித்தனர்.
News November 20, 2025
குமரி: வேலைதேடும் இளைஞர்கள் கவனத்திற்கு!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்தி செய்தி குறிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (நவ 21) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையம் மூலம் நடத்தப்படும் இம்முகாமில் வேலை தேடும் இளைஞர்கள் பங்கேற்று பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.


