News April 22, 2025

தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைது

image

குலசேகரன் புதூரைச் சேர்ந்தவர் சுடலையாண்டி. இவருடைய அண்ணன் இசக்கியப்பன். இவர்கள் இடையே சொத்து தொடர்பாக பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில் தம்பியிடம் வீட்டை எனக்கு எழுதித்தருமாறு அவரது அண்ணன் கேட்டு கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் இசக்கியப்பன் சுடலையாண்டியை கத்தியால் குத்தினார். இது தொடர்பாக சுசீந்திரம் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து இசக்கியப்பனை கைது செய்தனர்

Similar News

News October 19, 2025

குமரி: பள்ளி மாணவிகள் விண்ணப்பியுங்க

image

குமரி ஆட்சியர் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில்: குமரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு என 7 விடுதிகள் உள்ளன. இதில் அழகப்பபுரம் சமூக நீதி விடுதியில் 33 காலியிடங்கள் உள்ளன. தகுதி உடைய மாணவிகள் விடுதிகாப்பாளர் அல்லது மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலகத்தில் இருந்து பெற்று விண்ணப்பிக்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

News October 19, 2025

நாகர்கோவில் -சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் ரத்து

image

வண்டி எண் 06053 மற்றும் 06054 ஆகிய நாகர்கோவில் -சென்னை சென்ட்ரல் சிறப்பு ரெயிலும், சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் சிறப்புரையிலும் இம்மாதம் 28 மட்டும் 29 தேதிகளில் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் அந்த இரண்டு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

News October 18, 2025

குமரி: 2 பேரை பிடிக்க உத்தரவிட்ட நீதிமன்றம்

image

புதுக்கடை சிறிய வண்ணன்விளை பகுதியை சேர்ந்த ரீகன், கேரள மாநிலம் கையித்தோடு பகுதியை சேர்ந்த ஷபீக் ஆகிய 2 பேர் மீதும் புதுக்கடை போலீஸ் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளது. இவர்கள் 2 பேரும் நீண்ட நாட்களாக கோர்ட்டில் வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளனர். இந்நிலையில் 2 பேரையும் பிடித்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்த குழித்துறை கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

error: Content is protected !!