News August 27, 2024
தம்பியை கத்தியால் குத்திய அண்ணன்

அறந்தாங்கி கண்டிச்சங்காடு கிராமத்தை சேர்ந்தவர் சிவமுருகையா (65). இவரது சகோதரர் சிவரத்தினம் (52). இருவருக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று சிவமுருகையா பொது இடத்தை உழுததை கண்ட சிவரத்தினம் தடுத்துள்ளார். அப்போது, சிவமுருகையா, அவரது மருமகன் பசுபதி ஆகிய இருவரும் சேர்ந்து சிவரத்தினத்தை கத்தியால் கழுத்தில் குத்தியுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News January 4, 2026
புதுக்கோட்டை: திருமணத் தடைகள் போக்கும் கோயில்!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே திருமணஞ்சேரி சுகந்த பரிமளேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் இறைவன் சுகந்த பரிமளேஸ்வரர், இறைவி பெரிய நாயகி காட்சி தருகின்றனர். திருமணநாதர் என்ற பெயரும் சுகந்த பரிமளேஸ்வரருக்கு உண்டு. எனவே திருமணத்தடைகள் ஏற்படுவோர் இக்கோயிலில் பரிமளேஸ்வரை தரிசனம் செய்தால் திருமணம் கைக்கூடும் என்பது நம்பிக்கை. இதனை மற்றவர்களும் தெரிந்துக்கொள்ள SHARE பண்ணுங்க!
News January 4, 2026
புதுக்கோட்டை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

புதுக்கோட்டை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News January 4, 2026
BREAKING புதுக்கோட்டை: இளைஞர் துடிதுடித்து பலி

அறந்தாங்கி அடுத்த விச்சூர் அருகில் உள்ள ஒட்டாங்கரை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சுமன் (22). இவர் இன்று காலை தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிய போது தாழ்வாக சென்ற உயர் மின்னழுத்த கம்பியை, கேட்ச் பிடிக்க சென்ற போது பிடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


