News August 27, 2024
தம்பியை கத்தியால் குத்திய அண்ணன்

அறந்தாங்கி கண்டிச்சங்காடு கிராமத்தை சேர்ந்தவர் சிவமுருகையா (65). இவரது சகோதரர் சிவரத்தினம் (52). இருவருக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று சிவமுருகையா பொது இடத்தை உழுததை கண்ட சிவரத்தினம் தடுத்துள்ளார். அப்போது, சிவமுருகையா, அவரது மருமகன் பசுபதி ஆகிய இருவரும் சேர்ந்து சிவரத்தினத்தை கத்தியால் கழுத்தில் குத்தியுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News January 5, 2026
புதுகை: பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அடுத்த தோப்புவயல் டாஸ்மாக் கடை அருகே, நேற்று முகமது நசீம் (35) பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவருக்கு எதிரே பைக்கை ஓட்டி வந்த வினோத் காந்தி (32) மோதியதில் முகமது நசீமிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி யாஸ்மின் (30) அளித்த புகாரில் மணமேல்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 5, 2026
புதுக்கோட்டை: தவறி விழுந்து துடிதுடித்து பலி!

திருச்சியிலிருந்து புதுக்கோட்டைக்கு நேற்று வீரையா என்பவர் ஓட்டி சென்ற பைக்கில் பின்னால் அமர்ந்து சுப்பிரமணியன் (38) சென்றுள்ளார். அப்போது அன்னவாசல் பேயல் குளத்தினருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து தலையில் படுகாயமடைந்து சுப்ரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி பாண்டி மீனா (30) அளித்த புகாரின் பேரில் விரைந்து வந்த அன்னவாசல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 5, 2026
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (ஜன.,4) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


