News August 27, 2024

தம்பியை கத்தியால் குத்திய அண்ணன்

image

அறந்தாங்கி கண்டிச்சங்காடு கிராமத்தை சேர்ந்தவர் சிவமுருகையா (65). இவரது சகோதரர் சிவரத்தினம் (52). இருவருக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று சிவமுருகையா பொது இடத்தை உழுததை கண்ட சிவரத்தினம் தடுத்துள்ளார். அப்போது, சிவமுருகையா, அவரது மருமகன் பசுபதி ஆகிய இருவரும் சேர்ந்து சிவரத்தினத்தை கத்தியால் கழுத்தில் குத்தியுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News January 1, 2026

புதுகை: வேன் மோதி தனியார் நிறுவன ஊழியர் படுகாயம்

image

சென்னை தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தீபக்(40), கேசவ்(33), நித்தின்(33) ஆகியோர் நேற்று ராமேஸ்வரத்திலிருந்து புதுச்சேரி நோக்கி 2 டூவீலர்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது புதுகை – கந்தர்வகோட்டை தேசிய நெடுஞ்சாலையில் தஞ்சையிலிருந்து மதுரை நோக்கி சென்ற வேன் டூவீலர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கேசவ் புதுகை மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

News January 1, 2026

புதுகை: வடமாநில வாலிபருக்கு கத்திக்குத்து!

image

நமணசமுத்திரத்தில் ரெயில்வே கேட் கீப்பராக பணியாற்றி வருபவர் தீரஜ்குமார் (31). இவர் வடமாநிலத்தை சேர்ந்தவர். இவர் நேற்று பணியில் இருந்த போது ரெயில் வந்ததால் ரெயில்வே கேட்டை மூடினார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் கேட்டை திறக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டு தான் வைத்திருந்த கத்தியால் தீரஜ்குமாரை தாக்கி விட்டு தப்பி சென்று விட்டார். இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 1, 2026

புதுக்கோட்டை அருகே வாலிபர் பரிதாப பலி

image

குடுமியான்மலை அடுத்த குருக்களையாப்பட்டியைச் சேர்ந்தவர் அஜீத்குமார். இவர் ஒரு மோட்டார் சைக்கிளில் பெருமநாடு கிரசர் அருகே வந்தபோது ஆறுமுகம் என்பவரது  கடைக்கு முன் நின்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அஜீத்குமார் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து காவல்துறை விசாரித்து வருகின்றது.

error: Content is protected !!