News September 28, 2024
தம்பதியை அரிவாளால் வெட்டிய கணவன் – மனைவிக்கு சிறை

மேல்மிடாலம் எள்ளுவிளை பாலகிருஷ்ணன்-மேரி சைலஜா தம்பதியரை, பாலகிருஷ்ணனின் சகோதரர் பொன்னப்பன் அவரது மனைவி நேசம்மாள் சேர்ந்து சொத்து பிரச்சனை காரணமாக கடந்த 8.8.2006 அன்று அரிவாளால் தாக்கி விட்டு தப்பினர். இரணியல் கோர்டில் நடந்து வந்த இந்த வழக்கில் நீதிபதி அமிர்தீன், பொன்னப்பனுக்கு 3 ஆண்டு சிறை, நேசம்மாளுக்கு 1 ஆண்டு சிறை, இருவருக்கும் சேர்த்து ரூ.15,000 அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
Similar News
News November 16, 2025
தற்காலிக பாதை அமைக்கும் பணி தீவிரம்

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையான் கோவில் தெப்பக்குளத்தின் பக்க சுவர் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்நிலையில் இன்று தெப்பகுளத்தின் கருங்கல் சுவர்களை சரி செய்ய கட்டுமான பணிக்காக போக்குவரத்திற்கு தற்காலிக பாதை அமைக்கும்பணி
நடந்து வருகிறது. பணிகளை விரைந்து முடிக்கவும், மேலும் பழமை மாறாமல் புதுப்பிக்கவும் இந்து இயக்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
News November 15, 2025
BREAKING குமரியில் மிககனமழை; ஆட்சியருக்கு அறிவுறுத்தல்

நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் நாளை மறுநாள் மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க ஆட்சியர்களுக்கு மேலாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News November 15, 2025
குமரி: Certificate இல்லையா? கவலை வேண்டாம்!

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது<


