News September 28, 2024
தம்பதியை அரிவாளால் வெட்டிய கணவன் – மனைவிக்கு சிறை

மேல்மிடாலம் எள்ளுவிளை பாலகிருஷ்ணன்-மேரி சைலஜா தம்பதியரை, பாலகிருஷ்ணனின் சகோதரர் பொன்னப்பன் அவரது மனைவி நேசம்மாள் சேர்ந்து சொத்து பிரச்சனை காரணமாக கடந்த 8.8.2006 அன்று அரிவாளால் தாக்கி விட்டு தப்பினர். இரணியல் கோர்டில் நடந்து வந்த இந்த வழக்கில் நீதிபதி அமிர்தீன், பொன்னப்பனுக்கு 3 ஆண்டு சிறை, நேசம்மாளுக்கு 1 ஆண்டு சிறை, இருவருக்கும் சேர்த்து ரூ.15,000 அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
Similar News
News December 5, 2025
குமரி: விருதுக்குவிண்ணப்பிக்க கடைசி தேதி.. கலெக்டர் அறிவிப்பு

குமரி ஆட்சியர் அழகு மீனா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், 2025ம் ஆண்டுக்கு தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு உரிய நபரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டவர்கள் தங்களது விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் இம்மாதம் 18-ம் தேதிக்குள் ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று பதில் கூறியுள்ளார்.
News December 5, 2025
குமரி: பட்டா வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

குமரி மக்களே நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <
News December 5, 2025
குமரி: நாளை எங்கெல்லாம் மின்தடை?

குமரி மாவட்ட துணை மின்நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நாளை (டிச.6) நடக்கிறது. எனவே, காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை ஆலுவிளை, மேல்புறம், மருதங்கோடு, மாலைக்கோடு, புலியூர்சாலை, மேல்பாலை, பனச்சமூடு, அருமனை, மலையடி. பளுகல், களியக்காவிளை, மடிச்சல், பாலவிளை, விளவங்கோடு, கழுவன் திட்டை, குழித்துறை, இடைத்தெரு ஆகிய பகுதி மற்றும் கிராம பகுதியிலும் மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE


