News August 9, 2024

தமிழ் புதல்வன் திட்டம் துவக்கம் 

image

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் 1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில், இத்திட்டத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் கோவையில் துவக்கி வைத்தார். அவ்வகையில் இன்று ஈரோட்டில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா துவங்கப்பட்டது. 

Similar News

News November 20, 2025

ஈரோடு: செங்கோட்டையனுக்கு ஷாக் கொடுத்த நிர்வாகி!

image

ஈரோடு மாவட்டம் நம்பியூர் மொட்டணம் பகுதியைச் சேர்ந்த முன்னால் அமைச்சர் செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளரான திருமூர்த்தி அதிமுக நம்பியூர் மத்திய ஒன்றிய செயலாளர் மணிகண்ட மூர்த்தியை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்து இணைத்துக்கொண்டார். இந்நிகழ்வில் பட்டணம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

News November 20, 2025

ஈரோட்டில் வேலை வேண்டுமா? உடனே அப்ளை பண்ணுங்க!

image

ஈரோடு மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஈரோடு வேளாளா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் டிசம்பா் 6 ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி தெரிவித்தார். இதனை வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க!

News November 20, 2025

ரூ.25 லட்சம் மானியம் ஈரோடு கலெக்டர் அறிவிப்பு!

image

வேளாண்மை, கால்நடை மற்றும் மீன்வளர்ப்பு ஆகிய துறைகள் இணைந்து வேளாண் சார்ந்த புதிய தொழில் தொடங்குவதற்கு மானியம் வழங்கப்படுகிறது. புதிய நிறுவன வளர்ச்சிக்காக ரூ.10 லட்சம் வரை, மற்ற நிறுவனங்களுக்கு ரூ.25 லட்சம் வரையும் மானியம் வழங்கப்படவுள்ளது. இதனை www.agrimark.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம் என்றும் ஈரோடு கலெக்டர் கந்தசாமி அறிவித்து உள்ளார். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!