News August 9, 2024

தமிழ் புதல்வன் திட்டம் துவக்கம் 

image

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் 1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில், இத்திட்டத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் கோவையில் துவக்கி வைத்தார். அவ்வகையில் இன்று ஈரோட்டில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா துவங்கப்பட்டது. 

Similar News

News November 22, 2025

சிவகிரியில் பட்டப்பகலில் கொள்ளையர்கள்!

image

சிவகிரி அருகே குலவிளக்கு ஊராட்சிக்குட்பட்ட பூசாரிபாளையத்தை சேர்ந்த ராவுத்தகுமார் (39), தோட்டத்திற்கு புறப்பட்டபோது சந்தேகமான 2 பேர் வீட்டை நோக்கி நின்று இருந்தனர். திரும்பி வந்த போது, அவர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நுழைந்து திருட முயன்றனர். ராவுத்தகுமார் சத்தமிட்டதால், மர்ம நபர்கள் அவரை தள்ளி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர்.

News November 22, 2025

ஜெருசலேம் புனிதபயணத்துக்கு மானியம்

image

நவ.1 பிறகு ஜெருசலேம் புனிதபயணம் சென்று திரும்பிய 550 கிறிஸ்தவர்களுக்கு தலா ரூ.37,000, 50 கன்னியாஸ்திரிகள்/ அருட்சகோதரிகளுக்கு தலா ரூ.60,000 மானியமாக வழங்கப்பட உள்ளதால், தகுதியானவர்கள் ஈரோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெறலாம். 28-2-26க்குள் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, சென்னை-க்கு விண்ணப்பங்களை அனுப்பலாம் என கலெக்டர் கந்தசாமி தெரிவித்தார்.

News November 22, 2025

கோபி அருகே தேர்வு பயத்தால் மாணவர் தற்கொலை!

image

கோபி அருகே வேட்டைகாரன்கோவில் கிழக்கு கரடு வீதியில் வசிக்கும் ஞானசேகரன் குடும்பத்தில், பிளஸ்-1 கணினி அறிவியல் மாணவர் குரு அஸ்வின் (16) நேற்று வீட்டில் தற்கொலை செய்தார். தேர்வில் மதிப்பெண் குறைவாகும் பயத்தில் அவர் மின்விசிறி கம்பியில் தூக்குப்போட்டு இறந்துள்ளார். இதனால் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தெரியவந்தவுடன் கோபி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!