News August 14, 2024
தமிழ் புதல்வன் திட்டத்தின் துவக்க விழா

தமிழ்நாடு முதலமைச்சரால் ‘தமிழ் புதல்வன்’ திட்டம் கோவையில் தொடங்கி வைக்கப்பட்டதை அடுத்து, திருவாரூர் மாவட்டம், மஞ்சக்குடியில் தமிழ்புதல்வன் திட்டத்தினை தொடங்கி வைத்து மாணவர்களுக்கான மின்னனு அட்டையினை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கே.கலைவாணன் இன்று வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Similar News
News December 15, 2025
திருவாரூர்: மனைவியை கொல்ல முயன்ற கணவர்!

குடவாசல் கண்டியூரைச் சேர்ந்த ஆதித்யன்(28), பிரேமா(24) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். ஆனால் சமீபத்தில் ஆதித்யன் வேறு ஒரு பெண்ணுடன் பழகியதை அடுத்து, ஏற்பட்ட தகராறில் ஆதித்யன் டீசலை ஊற்றி பிரேமாவை கொளுத்தி கொல்ல முயன்றுள்ளார். இதில் காயமடைந்த பிரேமாவை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதையடுத்து குத்தாலம் போலீசார் பிரேமாவின் புகாரின் அடிப்படையில் ஆதித்யனை கைது செய்தனர்.
News December 15, 2025
திருவாரூர்: கார் மோதி விவசாயி பலி

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகே ஊர்குடியைச் சேர்ந்தவர் கோட்டைச்சாமி (55). விவசாயியான இவர், நேற்று தனது ஸ்கூட்டரில் திருவாரூர்-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஊர்குடி பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் மீது மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த கோட்டைசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
News December 15, 2025
திருவாரூர்: ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் (டிச.14) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


