News August 9, 2024
தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி பற்று அட்டை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதி, கள்ளிமந்தையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வங்கி பற்று அட்டையினை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, பழனி வருவாய் கோட்டாட்சியர் சரவணன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பொன்ராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் இருந்தனர்.
Similar News
News November 9, 2025
திண்டுக்கல் அருகே சிறுமி உட்பட 2 பேர் பலி!

திண்டுக்கல்: தொப்பம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட அத்திவலசு கிராமம் வழியாகச் செல்லும் அமராவதி ஆற்றில், 14 வயதுச் சிறுமி ஒருவர் எதிர்பாராதவிதமாக ஆற்றின் ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளார். இதனை கண்ட உடன் வந்த ஹசன் என்பவர், அச்சிறுமியை காப்பாற்றும் நோக்கில் உடனடியாக ஆற்றில் குதித்துள்ளார். இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
News November 9, 2025
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம் இன்று நவம்பர் 8 சனிக்கிழமை இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் ஊடகம், திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள காவல் துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
News November 8, 2025
திண்டுக்கல் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

வைகை அணையில் இருந்து இன்று முதல் 6 நாட்களுக்கு 1,000 கனஅடி விதம் தண்ணீர் திறக்கப்படும். வைகை அணையில் இருந்து 6 நாட்களுக்கு நீர் திறப்பதால் 35,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். வைகை அணையில் நீர் திறப்பால் திண்டுக்கல், மதுரை மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.


