News August 9, 2024
தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி பற்று அட்டை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதி, கள்ளிமந்தையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வங்கி பற்று அட்டையினை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, பழனி வருவாய் கோட்டாட்சியர் சரவணன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பொன்ராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் இருந்தனர்.
Similar News
News November 22, 2025
பழனி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு!

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை விறுவிறுப்பாக தொடங்கி உள்ளன. இந்நிலையில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில், பழனி சட்டமன்றத் தொகுதியில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் பழங்குடியினத்தை சேர்ந்த முருகேஸ்வரி போட்டியிட உள்ளதாக கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 22, 2025
திண்டுக்கல்லில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து!

திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு அருகே திண்டுக்கல் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு குடகனாறு பாலம் அருகே கம்பத்திலிருந்து பெங்களூருக்கு அதிவேகமாக சென்ற ஆம்னி பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பெண்கள் உட்பட 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் விபத்து குறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 22, 2025
திண்டுக்கல்: 10-வது போதும்.. SUPER சம்பளத்தில் வேலை!

திண்டுக்கல் மக்களே, அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) 1383 எழுத்தர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ITI, Diploma, Degree முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். ரூ.18,000 – ரூ.1,51,100 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <


