News August 9, 2024

‘தமிழ் புதல்வன்’ திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்

image

தமிழக அரசின் ‘தமிழ் புதல்வன்’ திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்பட்டது. அந்த வகையில், உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் பகுதியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கி தொடங்கி வைக்கப்பட்டது. இதில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ATM கார்டு வழங்கி சிறப்பித்தார்.

Similar News

News October 14, 2025

காஞ்சிபுரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

காஞ்சிபுரத்தில் இன்று (அக்.13 ) இரவு 10 மணி முதல் காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசியின் வாயிலாக அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 13, 2025

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் யோகிபாபு தரிசனம்

image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள சக்தி பீடங்களில் முதன்மையாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் பிரபல காமெடி நடிகர் யோகி பாபு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். நடிகருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பும், சிறப்பு தீபாராதனை மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது, ஏராளமான ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

News October 13, 2025

காஞ்சிபுரத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் மூன்றாம் கட்ட முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதில் நாளை (14.10.2025) காஞ்சிபுரம் மாநகராட்சி, குன்றத்தூர் நகராட்சி, திருப்பெரும்புதூர், வாலாஜாபாத் மற்றும் குன்றத்தூர் நகரப் பஞ்சாயத்து பகுதிகளில் முகாம்கள் நடைபெறவுள்ளன. பொதுமக்கள் தங்கள் குறைகளை ஆவணங்களுடன் மனுக்கள் அளிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

error: Content is protected !!