News August 9, 2024

‘தமிழ் புதல்வன்’ திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்

image

தமிழக அரசின் ‘தமிழ் புதல்வன்’ திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்பட்டது. அந்த வகையில், உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் பகுதியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கி தொடங்கி வைக்கப்பட்டது. இதில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ATM கார்டு வழங்கி சிறப்பித்தார்.

Similar News

News December 10, 2025

காஞ்சி: 129 பவுன் நகை கொள்ளை வழக்கு.. கோர்ட் அதிரடி தீர்ப்பு

image

ஸ்ரீபெரும்புதூர் ஜே.ஜே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பெருமாள். கடந்த மார்ச் மாதம், முத்துப்பெருமாள் வெளியே சென்றபோது, ​​வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, 129 பவுன் தங்க நகை, 2½ கிலோ வெள்ளி மற்றும் ரூ.25 லட்சம் பணம் திருடப்பட்டது. இது தொடர்பாக விஜய் குமார் (31) மற்றும் கார்த்திக் (22) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்நிலையில் நேற்று இருவருக்கு 3 ஆண்டுகள் தலா ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

News December 10, 2025

காஞ்சிபுரத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…

image

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் பச்சையப்பன் கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் வரும் டிச.27 அன்று நடைபெற உள்ளது. இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர். டிப்ளமோ, ஐ.டி.ஐ, 12th மற்றும் 10th படித்த 18-40 வயது வரை உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விபரங்களுக்கு 044-27237124, 044-27238894 என்ற எண்ணில் அழைக்கவும். ஷேர் IT

News December 10, 2025

காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (டிச.09) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!