News April 28, 2025

தமிழ் தெரிந்தால் போதும்; அரசு வேலை

image

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் உள்ள அலுவலங்களில் கிளீனர் பதவிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 5ஆம் வகுப்பு தேர்ச்சி (ம) தமிழ் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். 01.01.2025 அன்றுள்ளபடி 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட <>விண்ணப்பங்களை<<>> மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகத்தில் நாளை மாலை 5.45 மணிக்குள் சமர்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

Similar News

News September 18, 2025

வேலூர் ஆட்சியர் மக்களுக்கு புதிய அறிவிப்பு

image

வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஆறுகள், ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளில் உள்ள நீரில் பொதுமக்கள் குளிப்பதோ, குழந்தைகளை நீரில் விளையாட அனுமதிப்பதோ, துணிகள் துவைப்பதோ, ஆற்றினை கடந்து செல்வதோ கூடாது. மேலும் தேவையின்றி மழை நேரத்தில் வெளியே வருவதை தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (செப் ,18 ) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News September 18, 2025

JUST IN:வேலூர் மாவட்டத்தில் 8 போலி டாக்டர்கள் கைது

image

வேலூர் மாவட்டத்தில் எஸ்பி மயில்வாகனன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் ஆகியோர் இணைந்து போலி மருத்துவர்களை கண்டறிய இன்று (செப்டம்பர் 18) திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் மாவட்டம் முழுவதும் 8 நபர்கள் போலியாக மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவ சாதனங்களை பறிமுதல் செய்த போலீசார் 8 பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

News September 18, 2025

வேலூர்: உங்க ரேஷன் கார்டடை CHECK பண்ணுங்க…

image

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.

1.AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.

2.PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.

3.NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.

4.NPHH: சில பொருட்கள் மட்டும்.உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <>க்ளிக் <<>>செய்யுங்க..தகவல்களுக்கு: 9677736557,1800-599-5950 அழையுங்க.. இந்த தகவலை SHARE பண்ணுங்க…

error: Content is protected !!