News April 28, 2025

தமிழ் தெரிந்தால் போதும்; அரசு வேலை

image

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் உள்ள அலுவலங்களில் கிளீனர் பதவிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 5ஆம் வகுப்பு தேர்ச்சி (ம) தமிழ் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். 01.01.2025 அன்றுள்ளபடி 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட <>விண்ணப்பங்களை<<>> மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகத்தில் நாளை மாலை 5.45 மணிக்குள் சமர்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

Similar News

News November 21, 2025

வேலூர்: பணம் கேட்டு மிரட்டிய முன்னாள் காதலி!

image

வேலூர்: சலவன்பேட்டையைச் சேர்ந்த இசைக்கலைஞர் (38), 2008ல் கல்லூரி படிக்கும் போது பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார். அப்போது அந்த பெண் கர்ப்பமடைந்தது வீட்டாருக்கு தெரிந்த நிலையில், 2 பேரையும் பிரித்து, வேறு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில், தற்போது அந்த பெண், இசை கலைஞருக்கு ரூ.7 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து, அந்நபர் நேற்று (நவ.20) பாகாயம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

News November 21, 2025

வேலூரில் 658 பேருக்கு ரத்து!

image

வேலூரில் கடந்த ஜனவரி – அக்டோபர் வரை போலீசார் பரிந்துரையின் பேரில், மொத்தம் 658 பேரின் வாகன ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். விபத்துகளில் உயிரிழப்பை ஏற்படுத்தியதாக 73 பேர், குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக 85 பேர், அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 129 பேர், செல்போன் பேசி கொண்டு வாகனம் ஓட்டியதாக 14 பேரின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

News November 20, 2025

வேலூர்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களான குடியாத்தம், காட்பாடி, கே.வி. குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (நவ.20) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

error: Content is protected !!