News April 28, 2025

தமிழ் தெரிந்தால் போதும்; அரசு வேலை

image

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் உள்ள அலுவலங்களில் கிளீனர் பதவிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 5ஆம் வகுப்பு தேர்ச்சி (ம) தமிழ் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். 01.01.2025 அன்றுள்ளபடி 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட <>விண்ணப்பங்களை<<>> மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகத்தில் நாளை மாலை 5.45 மணிக்குள் சமர்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

Similar News

News November 21, 2025

வேலூர்: உள்ளாடையுடன் சில்மிஷம் செய்த நபர் கைது!

image

வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியை சேர்ந்தவர் சுனில் குமார்(23). இவர் மது அருந்திவிட்டு கடந்த 18ஆம் தேதி இரவு உள்ளாடையுடன் தெருக்களில் சுற்றித்திரிந்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த 35 வயது பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அந்தப் பெண் காட்பாடி போலீசில் புகார் அளித்த நிலையில், நேற்று (நவ.20) அவர் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News November 21, 2025

வேலூர்: 10th முடித்தால் உளவுத்துறையில் வேலை ரெடி!

image

வேலூர் மக்களே, மத்திய உளவுத் துறையில் காலியாக உள்ள 362 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 25 வயதிற்குட்ப்பட்டவர்கள் நவ. 22ம் தேதி முதல் டிச. 14க்குள் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். ரூ.18,000 – ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு<> CLICK<<>> செய்யவும். இந்த பயனுள்ள தகவலை ஷேர் செய்யுங்க

News November 21, 2025

வேலூர்: பணம் கேட்டு மிரட்டிய முன்னாள் காதலி!

image

வேலூர்: சலவன்பேட்டையைச் சேர்ந்த இசைக்கலைஞர் (38), 2008ல் கல்லூரி படிக்கும் போது பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார். அப்போது அந்த பெண் கர்ப்பமடைந்தது வீட்டாருக்கு தெரிந்த நிலையில், 2 பேரையும் பிரித்து, வேறு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில், தற்போது அந்த பெண், இசை கலைஞருக்கு ரூ.7 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து, அந்நபர் நேற்று (நவ.20) பாகாயம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

error: Content is protected !!