News August 10, 2024
“தமிழ் செம்மல்” விருது பெற விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் “தமிழ்ச்செம்மல்” விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பெறுகின்றன. தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.com என்ற வலைதளத்தில் விண்ணப்பப்படிவங்கள் என்ற தலைப்பில் உள்ள இணைப்பின் மூலமாகப் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News November 16, 2025
மயிலாடுதுறை: கறவை மாடு வாங்க மானியம்

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு ஒரு கறவை மாட்டிற்கு ரூ.60,000 வீதம் 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1.20 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்பட உள்ளதாக மயிலாடுதுறை கலெக்டர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். விருப்பமுள்ள நபர்கள் www.tabcedco.tn.gov.in என்ற இணைய முகவரி வாயிலாகவோ அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம்.
News November 16, 2025
மயிலாடுதுறையில் போலீசார் தீவிர கண்காணிப்பு

மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற காவிரி துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கடை முழுக்கு எனும் கடைமுக தீர்த்தவாரி இன்று நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ள நிலையில் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் 280 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் 30-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. கேமரா பொருத்திய ஈகிள் வாகனம் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது
News November 16, 2025
மயிலாடுதுறையில் 163 பேர் ஆப்சென்ட்!

தமிழக முழுவதும் இன்று ஆசிரியர் தகுதி தேர்வு (தாள் – 1) நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நான்கு தேர்வு மையங்களில் இன்று தேர்வு நடந்தது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 1295 தேர்வர்கள் தேர்வு எழுத ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 1132 பேர் தேர்வு எழுதி உள்ளனர். 163 பேர் இன்று தேர்வு எழுத வரவில்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


