News August 7, 2024

தமிழ்ப் புதல்வன் திட்டம் குறித்து ஆலோசனை 

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் இன்று முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்படவுள்ள தமிழ்ப் புதல்வன் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அழகு மீனா துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார். இத்திட்டத்தில் 6261 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும், 9ம் தேதி முதல் 1000 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.

Similar News

News November 28, 2025

குமரி: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

image

குமரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <>இங்கு கிளிக்<<>> செய்து சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 28, 2025

குமரி: விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

image

கரும்பாட்டூரை சேர்ந்தவர் கண்ணன் (42) தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. மது குடித்துவிட்டு வீட்டின் பக்கத்தில் உள்ளவர்களிடம் தகராறு செய்து வந்தார். கண்ணன் மது குடிப்பதை அவரது மனைவி கண்டித்து உள்ளார். இதனால் கண்ணன் விஷம் குடித்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் இறந்துவிட்டார். தென் தாமரைகுளம் போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

News November 28, 2025

குமரி: உங்கள் வழக்குகளை முடிக்க சூப்பர் வாய்ப்பு!

image

குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மாவட்ட மற்றும் வட்டச் சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் டிசம்பர் 13ம் தேதி மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளை சமாதானமாகவும், விரைவாகவும் முடித்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. பத்மநாபபுரம், இரணியல், குழித்துறை மற்றும் பூதப்பாண்டி நீதிமன்ற வளாகத்திலும் மக்கள் நீதிமன்றங்கள் நடைபெற உள்ளது.

error: Content is protected !!