News August 7, 2024

தமிழ்புதல்வன் திட்டம் குறித்து ஆட்சியர் ஆலோசனை

image

தமிழ்புதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களின் வங்கி கணக்குகளை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் தருமபுரி கலெகடர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஆட்சியர் பேசுகையில்; மாணவர்களுக்கு புதிய வங்கிக் கணக்கு தொடங்குதல், ஆதார் எண் வங்கி கணக்குடன் இணைத்தல், நீண்ட நாட்களாக பரிவர்த்தனை முடங்கிய கணக்குகளை புதுப்பித்தல் பற்றி ஆய்வு மேற்கொள்ள எடுத்துரைத்தார்.

Similar News

News December 4, 2025

தருமபுரியில் 8 பவுன் நகையை மீட்ட காவலர்!

image

சேலத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வி நாகர்கோவிலில் இருந்து சேலம் – மும்பை ரயிலில் சேலத்துக்கு வந்தார், செவ்வாய்க்கிழமை சேலம் வந்ததும் தமிழ்ச்செல்வி ரயிலைவிட்டு இறங்கியுள்ளார். அப்போது ரயிலில் 8 பவுன் நகை & 3000 பணப்பையை ரயிலில் தவற விட்டுள்ளார். பின், சேலம் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தன் பேரில், தருமபுரி உதவி ஆய்வாளர் ரமேஷ், நகை & பணத்தை மீட்டு நேற்று (டிச.3) தமிழ்செல்வியிடம் ஒப்படைத்தார்.

News December 4, 2025

தருமபுரி: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News December 4, 2025

தருமபுரி: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!